உலகம்

இஸ்ரேல் படையில் திருடர்கள் பிரிவு போரால் பாதிக்கப்பட்டவர்களிடம் கொள்ளை! ரூ.242 கோடி, நகை, பணத்தை திருடியது அம்பலம்!

போரால் பாதிக்கப்பட்டு, உறவுகளை இழந்து வாடும் காசா மக்களிடம் இருந்து இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், நகை, பணத்தை திருடிச் சென்று அதனை இஸ்ரேல் தேசிய வங்கியில் டெபாசிட் செய்த செய்தியும், அதற்காகவே LOOT UNIT என்ற பெயரில் தனிப் பிரிவை இஸ்ரேல் உருவாக்கி வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.

தற்போது, ஈரான் வீசும் ஏவுகணைக்கு பறந்து, சுமார் 80 லட்சம் ஆக்கிரமிப்பு குடிமக்கள் தங்களது நேரத்தில் பெரும்பகுதியை பதுங்கு அறைகளில் செலவு செய்து வருகின்றனர். அதேப் போல, தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக, தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அப்படி வீடுகளை விட்டு அவர்கள் வெளியேறும் போது, அவர்களின் வீடுகளை குறிவைத்து, சக இஸ்ரேலியர்களே கொள்ளை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

I Left Gaza for Work and Now Can't Return. Watching It Bleed from Afar Is a  Nightmare. | Human Rights Watch

இதுகுறித்து ஆக்கிரமிப்பு ஊடகமான சேனல் 12க்கு பேட்டியளித்த போலீஸ் துறை அமைச்சரும் பயங்கரவாத வலதுசாரியுமான பென்குவிர், அதிகரித்து வரும் திருட்டுச் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகவும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அண்மையில் ஒரு செட்டிலரை ஆக்கிரமிப்பு போலீஸ் கைது செய்த போது, அவரிடம், நகை, பணம், விலை உயர்ந்த வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இஸ்ரேலியர்களிடம் இந்த பழக்கம் எப்படி ஏற்பட்டது, என்பதை ஆய்வு செய்யும் போது, திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அல்மாயதீன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், இந்த பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், இஸ்ரேல் ராணுவத்தில் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள திருடர்கள் படை தான் என தெரிவித்துள்ளது.

காசா, தெற்கு லெபனான், சிரியாவில் ஆக்கிரமிப்பு போரை இஸ்ரேல் நடத்திய போது, கொல்லப்படும் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து, அவர்கள் வைத்திருந்த நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடியுள்ளனர். அவற்றை திருடி, அவற்றை இஸ்ரேல் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக LOOT UNIT என்ற பெயரில் 500 பேர் அடங்கிய தனிப்படையை அமைத்து, அதற்கு கமாண்டர், டெபுடி கமாண்டர் பதவியில் அதிகாரிகளையும் இஸ்ரேல் நியமித்துள்ளது.

இப்படி மொத்தம் கொள்ளையடிக்கப்பட்ட தொகை மட்டும் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 242 கோடி ரூபாய். இவற்றை இஸ்ரேல் மத்திய வங்கியில் திருடர்கள் படை டெபாசிட் செய்துள்ளது. போருக்கு அதிக தொகை செலவு செய்யப்படுவதால், திருட்டுச் சம்பவங்களை அதிகரிக்குமாறு திருடர் படைக்கு, இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தான், அப்பாவி மக்களிடம் திருடி வந்த இஸ்ரேலுக்கு, தற்போது, திருடனை தேள் கொட்டியது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரசன் எவ்வழியோ, குடிமக்கள் அவ்வழி என்பதைப் போல, அப்பாவி மக்களிடம் இஸ்ரேல் ராணுவம் செய்த அட்டூழியத்தை, தற்போது, சக இஸ்ரேலியர்கள், தங்களது அண்டை வீட்டாரிடம் செய்யத் தொடங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button