உலகம்வைரல்

உலகிலேயே அதிகம் விற்பனையாகும் 2வது ஃபர்பியூம் எது தெரியுமா?

பல நூற்றாண்டுகளைக் கடந்தும் உலக அளவில் ஒரு ஃபர்மியூம் அதிக அளவில் விற்பனையாகக்கூடியதாக நீடித்திருக்க முடியுமா?. ஆம், 100 ஆண்டுகளைக் கடந்தும் ஷாலிமார் என்ற வாசனை திரவியம் இன்று வரை ஃபேஷன் உலகை ஆண்டு வருகிறது.

முகலாய மன்னர் ஷாஜகான் – மும்தாஜ் காதல் கதையின் ஊக்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாசனை திரவியம் பாரிஸின் ஃபேஷன் உலகம் வரை ஆட்சி தனது கிளைகளை பரப்பியுள்ளது. உலகின் சிறந்த வாசனை திரவியங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற கெர்லைன்.

Guerlain Shalimar Eau De Parfum 90ml

இவர் ஒருமுறை பாரிஸில் மகாராஜா ஷாஜகானை சந்தித்த போது, அவரது மனைவி மும்தாஜ் மீதான அளப்பறிய காதலை அறிந்து கொண்டார். மும்தாஜிற்காக ஷாஜகான் உருவாக்கிய ஷாலிமார் தோட்டத்தையும், அதன் வாசனையையும் பிரதிபலிக்கும் வகையில் ஒரு ஃபர்மியூமை உருவாக்கினார்.

வெல்வெட் வெண்ணிலா, காம உணர்வைத் தூண்டும் சந்தனம், பிசினஸ் பென்சாயின், ஐரிஸ், பச்சௌலி மற்றும் டோங்கா பீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு காதல் உணர்வை தூண்டக்கூடிய அற்புதமான வாசனை திரவியத்தை உருவாக்கினார்.

அதற்கு ஷாலிமார் என பெயரும் வைத்தார். 1925 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த சர்வதேச அலங்கார கலை கண்காட்சி விருதை வென்ற அந்த ஃபர்மியூம் இன்றளவும் உலக அளவில் அதிகமாக விற்பனையாகும் 2வது வாசனை திரவியமாக இருந்து வருகிறது. உலக அளவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 108 பாட்டில்கள் விற்பனையாகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், இதன் மவுசை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button