கான்கிரீட் காடான பெங்களூரு… ஒரு அபார்ட்மெண்ட் வாடகை இவ்வளவா?

கான்கிரீட் காடாக மாறி வரும் பெங்களூருவில் அப்பார்ட்மெண்ட் வாடகை வரலாறு காணாத உச்சம் தொட்டு வருகிறது. ஐ.டி.யில் அபார வளர்ச்சி கண்டு வரும் பெங்களூருவில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதனால் அங்கு மிகச்சிறிய அளவிலான ரூம்களே அதிக வாடகைக்கு விடப்படுவதாக சோசியல் மீடியாக்களில் பலரும் கதறுவது உண்டு. இந்நிலையில் 3 பெட்ரூம்களை கொண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றின் வாடகையைக் கேட்டு நெட்டிசன்கள் செம்ம ஷாக்கில் ஆழ்ந்துள்ளனர்.
தற்போது வைரலாகும் வரும் ரெடிட் பதிவில், நார்மலான ஒரு 3BHK பிளாட்டின் வாடகை ரூ.2.7 லட்சம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு 15 லட்சம் ரூபாய் டெபாசிட்டாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் ஐ.டி. பார்க்குகள் அதிகமுள்ள ஹரலூர், HSR லேஅவுட் மற்றும் சர்ஜாபூர் சாலை பகுதிகளில் 2 பெட்ரூம்களைக் கொண்ட அப்பார்ட்மெண்ட்கள் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகைக்கு விடப்படுகிறதாம். சில பகுதிகளில் 3 பெட்ரூம் பிளாட்கள் 2 லட்சத்திற்கு மேல் வாடகை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பதிவைப் பார்த்த பெங்களூருவாசிகளோ செம்ம கோபத்தில் உள்ளனர்.
பெங்களூருவைப் பத்தி வதந்தி பரப்புவதே இணையவாசிகளுக்கு வேலையா போச்சு என்ற ரேஞ்சுக்கு திட்டி வருகின்றனர். ஒருவேலை இது கை தவறி நடந்திருக்கலாம். இந்த பிளாட்டின் வாடகை 50 ஆயிரமாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளது. இல்லை வேண்டுமென்றே யாராவது பதிவிட்டிருக்கலாம் என வக்காலத்து வாங்கி வருகின்றனர்.