உலகம்

ஈரான் நினைத்தால் 9 அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் – அலறும் இஸ்ரேல்!

9 அணுகுண்டுகளை தயாரிக்கும் அளவுக்கு ஈரான் தற்போது, யுரேனியத்தை வைத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இஸ்ரேல் கடும் அதிர்ச்சியில் உரைந்துள்ளது. ஐ.நா மன்றத்திற்கு கீழ் செயல்படும் சர்வதேச அணு சக்தி கழகம், வெளியிட்ட செய்தியில், அணு ஆயுதம் தயாரிப்பதற்கு தேவையான 90 சதவீத பணிகளை ஈரான் முடித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதனை மறுத்துள்ள ஈரான், மின்சார உற்பத்திக்கு மட்டுமே யுரேனியத்தை செரிவூட்டுவதாக அறிவித்துள்ளது.

இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் ஈரான் மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறி, அந்நாடு 43 மடங்கு அதிகமான யுரேனியத்தை செரிவூட்டியுள்ளதாக சர்வதேச அணு சக்தி கழகம் கூறியுள்ளது. இதனை நிராகரித்துள்ள ஈரான், இதனை காரணம் காட்டி, ஐரோப்பிய நாடுகள் தங்கள் மீது தடை விதித்தால், கடும் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
சர்வதேச அணு சக்திக் கழகம், உறுப்பு நாடுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஈரான் 408 கிலோ செரிவூட்டப்பட்ட யூரேனியத்தை வைத்துள்ளதாகவும், இதனை வைத்து 9 அணு குண்டுகள் செய்யலாம் என கூறியுள்ளது.இந்தத் தகவல் ஈரானின் எதிரி நாடான ஆக்கிரமிப்பு இஸ்ரேலை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஈரானை உடனடியாக உலக நாடுகள் தடுத்து நிறுத்த வேண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கதறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button