உலகம்

இடைமறித்தால் சிதறித் தாக்கும் – ஏமனின் புதிய ஆயுதம்!

வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாக இஸ்ரேலில் இருந்து வெளியேற வேண்டும் என ஏமன் ஹவுத்திப் படைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தங்களது ஆயுதத்தை இனி இஸ்ரேல் இடைமறித்தாலும், அவரை சிதறிச் சென்று இலக்குகளை தாக்கும் வகையில், புதிய ஆயுதங்களை வடிவமைத்துள்ளதாக ஏமன் ஹவுத்திப் படைகள் இஸ்ரேலுக்கு அதிர்ச்சி செய்தியை வழங்கியுள்ளன.


எனவே இஸ்ரேலில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் இனி அங்கு இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஏமன் கூறியுள்ளது. எனவே உரிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக வெளியேறுமாறு ஏமன் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏற்கனவே இஸ்ரேலிய போர் விமானங்கள், கப்பல்கள் செல்லும் பாதையை வெளிநாட்டு விமானங்கள், கப்பல்கள் தவிர்க்க வேண்டும் என ஏமன் கேட்டுக் கொண்டது. மேலும் அமெரிக்க தயாரிப்பான F35 போர் விமானத்தை வீழ்த்தும் ஆயுதம் தங்களுக்கு கிடைத்துவிட்டதால், இனி ஏமனை தாக்கும், விமானங்கள் பற்றிய நல்ல செய்தி, கிடைக்கும் என ஏமன் ஹவுத்தி அதிபர் Mahdi al-Mashat கூறியிருந்தார்.இந்தச் சூழலில் புதிய எச்சரிக்கை ஒன்றை ஏமன் விடுத்திருப்பது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
காசா மக்கள் மீதான ஆக்கிரமிப்பு போர் தொடரும் வரை, ஏமனின் தாக்குதல்கள் இஸ்ரேல் மீது நீடிக்கும் என ஏமன்படைகள் திட்டவட்டமாக கூறி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button