
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் சர்ரென ஏறி வருகிறது. விரைவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 10 ஆயிரத்தை தொடக்கூடும் என கருதப்படும் நிலையில், 2030ம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் 23 ஆயிரத்தை தொடும் என சர்வதேச முதலீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஜெர்மனியின் லிச்சென்ஸ்டைனைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான இன்க்ரிமெண்டம் “கோல்ட் வி டிரஸ்ட் ரிப்போர்ட் 2025” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை உயருவதற்கான காரணங்கள், எதிர்காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு தங்கத்தின் விலை உயருவதற்கான வாய்ப்பு குறித்து குறிப்பிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பல நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள் தங்களது கையிருப்பில் உள்ள தங்கத்தின் அளவை ஆண்டுக்கு ஆயிரம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளதாகவும், பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகளிலும் தங்கத்தின் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆரம்பித்திருப்பது தங்கத்தின் விலை உயர காரணம் எனக்கூறப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் 2030ம் ஆண்டுக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 8,900 அமெரிக்க டாலர்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்டுக்கு 19 சதவீத வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த ஆண்டின் இறுதியிலே 4,080 டாலர்களை தொடும் என முதலீட்டு நிறுவனம் கணித்துள்ளது. அதாவது ஒரு கிராம் 10, 895 ரூபாயாக உயரும் எனக் கூறப்படுகிறது.