பாலஸ்தீன தனி நாடு குறித்து சவுதி பேசாது! டிரம்புடன் என்ன பேசப் போகிறது சவுதி?
பாலஸ்தீன தனி நாடு குறித்து சவுதி பேசாது! டிரம்புடன் என்ன பேசப் போகிறது சவுதி? போர் விமானங்களை வாங்குவது குறித்த அறிவிப்பு வெளிவரலாம் எனத் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதால், அனைவரின் பார்வையும் வளைகுடாப் பகுதியை நோக்கி உள்ளது.
இந்த பயணத்தின் நோக்கம் என்ன, இதன் முடிவு எப்படி இருக்கும் என்ற யூகங்களை அரபு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன, அதனைப் பார்க்கலாம்.
ஜனவரியில் பதவியேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டிரம்ப் மத்திய கிழக்கை தேர்ந்தெடுப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டிரம்புடன் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பென்டகன் தலைவர் பீட் ஹெக்செத், கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் மற்றும் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உள்ளிட்ட ஒரு பெரிய குழு வருகை தருகிறது.
இஸ்ரேல் இப்போது முழு காசா பகுதியையும் கைப்பற்றி மேற்குக் கரையை இணைக்க திட்டமிட்டுள்ள நிலையில், இதுகுறித்து அரேபியத் தலைவர்கள், டிரம்பிடம் முறையிடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய அஜெண்டாவாக இது இருக்கும் என நம்பப்படுகிறது.
அதுமட்டுமின்றி, சவுதி அரேபியா அமெரிக்க போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் ஒரு பெரிய அறிவிப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக F-15, அல்லது F-35 விமானங்களை சவுதி பெருமளவில் கொள்முதல் செய்யும் அறிவிப்பு வெளியாகும் என கருதப்படுகிறது.
இஸ்ரேலிய பிரதமர் பெனஜ்மின் நெதன்யாகு காசா போரைத் தொடர்வதில் பிடிவாதமாக இருப்பதால், இரு நாடுகள் கொள்கை, இஸ்ரேல் உடன் சவுதி உறவுகளை இயல்புபடுத்துதல் போன்றவை இந்த பேச்சு வார்த்தைகளின் போது, இடம்பெறாது என யூரேசியா குழுமத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் நிர்வாக இயக்குனர் ஃபிராஸ் மக்சாத் சமீபத்தில் CNN உடனான ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
அதே நேரம் இந்த சந்திப்பு குறித்து தெரிவித்துள்ள, சவுதி அரசியல் ஆய்வாளர் அலி ஷிஹாபி, “சவுதி இனி ஆயுதங்களை வாங்குபவராகவோ அல்லது உலக விவகாரங்களில் செயலற்ற நாடாகவோ இருக்காது, உலக ஒழுங்கில் ஒரு சமநிலையை இனி கடைபிடிக்கும் என கூறியுள்ளார்.