காசா ஆதரவு தொடரும் – ஹமாஸ் தலைவரை சந்தித்து உறுதி அளித்த ஈரான் உயர் அதிகாரி!

ஹமாஸ் அமைப்பின் சூரா கவுன்சில் தலைவர் முகமது தர்வேஸ், ஈரான் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கமால் ஹராசியை கத்தார் தலைநகர் தோகாவில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆக்கிரமிப்பு நிர்வாகத்தின் அண்மை இனப்படுகொலை நடவடிக்கைகள், காசா மீதான பட்டினிப் போர், அவசர பிராந்திய ஒற்றுமை, இனப்படுகொலைகளை உடனடியாக தடுத்து நிறுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோனிச நிர்வாகத்தின் பயங்கரவாதத் தாக்குதல்கள், முற்றுகையை விலக்கிக் கொள்ளுதல், உணவுத் தேவைகளை பூர்த்தி செய்தல், உறுதி மிக்க காசா மக்களின் காயங்களை குணப்படுத்தும் நடவடிக்கைகளை முடிந்த அளவு தீவிரமாக ஹமாஸ் இயக்கம் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு சோதனைகள் வந்தாலும், பாலஸ்தீனம் மீதான உரிமையை ஒரு போதும் பாலஸ்தீனியர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரான் அதிகாரி கராசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு எதிரான, பாலஸ்தீனியர்களின் போராட்டத்திற்கு, ஈரான் எப்போதும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும். பாலஸ்தீனியர்களின் போராட்டத்தை ஆதரிப்பது என்பது, ஈரானின் உறுதியான வெளியுறவுக் கொள்கை ஆகும். பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்த பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் முயல்கிறது என அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
===============