உலகம்

உலகிலேயே மிகப்பெரிய பாம்பு பண்ணை எங்கு இருக்கிறது தெரியுமா?

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாம்புகளை வளர்க்கும் பண்ணை... வருமானத்தைக் கேட்டால் ஆடிப்போவீங்க... ஆடி...

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் வியட்நாமில் பாம்புகளை வைத்து பண்ணையே நடத்தப்படுகிறது என்றால் நம்புவீர்களா? வியட்நாமின் டியான் ஜியாங்கில் உள்ள `டோங் டாம் பாம்புப் பண்ணை’ உலகின் மிகப்பெரிய பாம்பு பண்ணையாக விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா பயணிகளின் ஆர்வத்தை இந்தப் பண்ணை ஈர்த்துள்ளது.

1977 முதல் 1998-ம் வரை டோங் டாம் பாம்புப் பண்ணை, பாம்புக் கடி மற்றும் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டது. 2009 முதல் இப்போது வரை ஆண்டுக்கு சராசரியாக 1,000 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்தப் பண்ணை இதற்கு முன்பு டூ டியோக் என்ற ஓய்வுபெற்ற வியட்நாம் சிப்பாய் கர்னல் மூலம் நடத்தப்பட்டது.

1990-ல் அவர் இறந்த பிறகு, வசதிகள் குறையத் தொடங்கின. இப்போது, பாம்புப் பண்ணை வியட்நாமிய ராணுவத்தால் லாபத்துக்காகவும் மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் செயல்படுகிறது.

இந்தப் பண்ணை நிறுவுவதற்கான முக்கிய நோக்கம் மருத்துவ தாவரங்களை உற்பத்தி செய்வதோடு, மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன. அங்கு பாம்புகள் மட்டுமல்லாமல், மருத்துவக் குணமுள்ள மூலிகைத் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன. இது வியட்நாமில் உள்ள ஒரே பாம்பு அருங்காட்சியகம் என்று கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளது. இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷப் பாம்புகளும் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக இந்த பண்ணையில் தான் நீங்கள் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட அரிய வகை பாம்புகளை பார்க்க முடியும். பாம்பு விஷம் மூலம் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் பார்வையாளர்கள் மூலமாக இந்த பண்ணைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருவமானம் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button