இந்தியா

சர்ச்சையில் சச்சினின் காதல் மனைவி இரவில் நடந்த பரபரப்பு சம்பவம்

பாகிஸ்தானுக்கு போகமாட்டேன், முன்னாள் கணவருடன் சேர மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டே இங்கேயே வசித்து வரும் சீமா ஹைதருக்கு புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளது

பப்ஜி காதலுக்காக எல்லை தாண்டி வந்த சீமா ஹைதர் தற்போது மீண்டும் சோசியல் மீடியாக்களில் பேசு பொருளாகியுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஜகோபாபாத்தைச் சேர்ந்த 32 வயதான ஹைதர், 2023ம் ஆண்டு தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கராச்சியில் இருந்து நேபாளம் வழியாக இந்தியா வந்தடைந்தார்.

இங்கு கிரெட்டர் நொய்டாவைச் சேர்ந்த சச்சின் மீனாவை மணந்தவர் முழு இந்துவாகவே மாறி குடும்பம் நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

ஏற்கனவே பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவை விட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால் பாகிஸ்தானுக்கு போகமாட்டேன், முன்னாள் கணவருடன் சேர மாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டே இங்கேயே வசித்து வரும் சீமா ஹைதருக்கு புதிதாக ஒரு சிக்கல் முளைத்துள்ளது.

திடீரென குஜராத்தில் இருந்து கிரெட்டர் நொய்டாவுக்கு டிக்கட் போட்டு வந்த ஒருநபர் சீமாவின் வீட்டிற்குள் இரவு நேரத்தில் புகுந்து கலாட்டா செய்துள்ளார். அந்த நபர் சீமா தனக்கு சூனியம் செய்துவிட்டதாகவும், அவர் சூனியக்காரி என்றும் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள சுரேந்தர் நகரைச் சேர்ந்த தேஜாஸ், என்பவர் இதற்காகவே 1000 கிலோ மீட்டர்கள் கடந்து சரியாக டெல்லிக்கு டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்து வந்ததோடு, சீமா ஹைதரின் புகைப்படத்தைக்காட்டி கிரேட்டர் நொய்டாவில் அவரது வீட்டையும் சரியாக கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தேஜாஸ் மனநலம் பாதிக்கப்பட்டவாரா? அல்லது சீமா ஹைதரை பாகிஸ்தானுக்கு ஓட வைக்க ஏதோனும் திட்டத்துடன் செயல்படுகிறாரா?சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button