சினிமா

23 வயதிலேயே 3வது முறையாக அம்மாவான பிரபல நடிகை..?செம்ம வைரலாகும் போட்டோ

ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்

எம்பிபிஎஸ் படித்து முடித்த நடிகை ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே 2022ல் இரண்டு மாற்று திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதை ஸ்ரீலீலா அறிவித்து உள்ளார்.

“இதயத்தின் மீதான படையெடுப்பு, வீட்டிற்குள் மற்றொருவர்” என அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஸ்ரீலீலாவின் இச்செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட்டில் பாப்புலரான நாயகியான ஸ்ரீலீலா. இளம் ஹீரோக்கள் முதல் சீனியர் ஹீரோக்கள் வரை பலருடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். எம்பிபிஎஸ் படித்து முடித்த நடிகை ஸ்ரீலீலா தமிழில் சிவகார்த்திகேயன் உடன் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் ஸ்டார் ஹீரோ சைஃப் அலி கானின் மகன் இப்ராஹிம் கான் தற்போது ‘திலர்’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ளார். நாக சைதன்யாவின் புதிய படத்திலும் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. அதேபோல், அக்கினேனி அகிலின் படத்திலும் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். பாலிவுட் இளம் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் ஸ்ரீலீலா ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதையெல்லாம் விட ஸ்ரீலா செய்த மகத்தான காரியம், சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஸ்ரீலீலா ஏற்கனவே 2022 ஆம் ஆண்டில் குரு மற்றும் ஷோபிதா என்ற இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தார்.

தற்போது 3வதாக ஒரு குழந்தையை தத்தெடுத்துள்ளது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீலா ஒரு சின்னசிறு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதனைப் பார்க்கும் நெட்டிசன்கள் அவர் 3வது குழந்தையை தத்தெடுத்துள்ளாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஸ்ரீலீலா இளம் வயதிலேயே இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்தது அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவருடைய நல்ல உள்ளம் பாராட்டப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button