உலகம்

எந்த நேரமும் குடி, கூத்து, கும்மாளம்! FBI இயக்குநர் காஷ் படேல் மீது புகார்!

உலகின் சக்திவாய்ந்த,திறமை மிக்க உளவுத்துறை அமெரிக்காவின் FBI. இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல். டிரம்ப்பிற்கு நெருக்கமான இவர், புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் FBI இயக்குநராக பொறுப்பேற்றார்.

இதனை இந்தியர்கள் கொண்டாடிய நிலையில், தற்போது, இவர் மீது பெரும் புகார் சுமத்தப்பட்டுள்ளது. அது வேறு ஒன்றும் அல்ல. இவர் அலுவலகத்திற்கு வருவதில்லை. மாறாக எந்நேரமும் பப் விடுதிகளில், குடி கும்மாளம், ஆட்டம் பாட்டம் என்று இருக்கிறார் என்பது தான் இவர் மீதான வினோத குற்றச்சாட்டு.

அமெரிக்காவின் பிரபல ஊடகம் ஒன்றில், FBI அமைப்பின் முன்னாள் தலைவர் ஃபிராங்க் ஃபிக்லியுஸி என்பவர் தான் இந்த பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

காஷ் பட்டேல் தனது வீட்டில் தான் அதிக நேரம் இருக்கிறார். மாதத்தில் சில நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு வருகிறார். தினமும் அதிகாரிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். ஆனால் இவர் வாரத்திற்கு ஓரிரு முறை மட்டுமே சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

தனி ஜெட் விமானம் இவருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதனை தனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துகிறார் போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை ஃபிராங்க் ஃபிக்லியுஸி சுமத்தியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் FBI அமைப்புக்கு உள்ளும், அமெரிக்காவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button