சவுதியின் கெடுபிடி – குறைந்த புனித பயணிகள்!
சவுதி அரசின் கடுமையான நடவடிக்கைகளால் புனித பயணிகள் குறைந்துள்ளனர்

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளுள் ஒன்று ஹஜ் எனும் புனித யாத்திரை. வருடந்தோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் சில நாட்களில் ஹஜ் தொடங்க உள்ள நிலையில் மக்காவில் குறைந்த எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் காணப்படும் வீடியோ வைரலாகியுள்ளது.அவ்வீடியோவில் ஒருசில யாத்ரீகர்களே மக்காவின் மத்தப் பகுதியில் காணப்படுகின்றனர்.
சவுதி அரசின் கட்டுப்பாடுகளே யாத்ரீகர்களின் குறைவிற்கு காரணம் என கூறப்படுகிறது. ஹஜ் விசா வைத்துள்ளவர்கள் மற்றும் மக்காவில் வேலை பார்ப்பதற்கான விசா வைத்துள்ளவர்கள் மட்டுமே மக்காவில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் ஏப்ரல் 29 ம் தேதிக்குள் மக்காவை விட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல வெளிநாட்டினர் ஏப்ரல் 23 முதல் மக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.ஹஜ் பயணம் முடியும் வரை இந்நடைமுறைகள் அமலில் இருக்கும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள வரும் யாத்ரீகர்கள் சிரமமின்றி தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.