இந்தியா

கொத்து கொத்தாக ராஜினாமா செய்யும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்!?

இந்தியாவின் பதிலடிக்கு பயந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சுமார் 5000 பேர் ராஜினாமா செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனினும் இந்தத் தகவலை உறுதிபடுத்தமுடியவில்லை என எக்னாமிக் டைம்ஸ் உள்ளிட்ட இந்திய பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக பாகிஸ்தானின் ராணுவ மேஜர் ஜெனரல் பைசல் மெஹ்மூது மாலிக் என்பவர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுற்றறிக்கையின் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை என இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ராணுவத்தின் அனைத்து தரவரிசையில் உள்ள அதிகாரிகளும், தங்களது ராணுவ நன்னெறிகளை கடைபிடிப்பதோடு, தங்களது விசுவாசத்தை நாட்டிற்கு காட்ட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை வீரர்கள் வரை சுமார் 5000 பேர் ராஜினாமா செய்ததாக வெளியான செய்திகளுக்கு, இடையே இப்படி ஒரு சுற்றறிக்கை வைரலாகி வருகிறது.

இதனிடையே காஷ்மீர் மாநிலம் என்பது பாகிஸ்தானின் உயிர் நாடி என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த, அந்நாட்டு ராணுவ தளபதி சையது ஆசிம் முனிர் என்பவருக்கு, இந்தியா குறி வைத்துள்ளதாகவும், அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே அவர் பிரதமர் ஷேபாஷ் ஷரீப்புடன், முனிர் இருக்கும் புகைப்படங்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டன. எனினும் அது பழைய புகைப்படம் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button