24 வயதில் 4,300 கோடி ரூபாய்க்கு சொத்து… யார் இந்த ஆதித் பாலிச்சா?

வாய்ப்புகள் உங்களைத் தேடி வராது நீங்கள் தான் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இதற்கு சிறந்த முன்னூதாரணம் ஆதித் பாலிச்சா, சந்தர்ப்ப சூழ்நிலையால் படிப்பை பாதியிலேயே கைவிட்ட பாலிச்சா இன்று இந்தியாவின் இளம் கோடீஸ்வரராக வலம் வருகிறார். உலகிலேயே தலைசிறந்த பல்கலைக்கழகமான ஸ்டான்போர்ட்டில் கணினி அறிவியல் படிப்பதற்காக சேர்ந்த அவர், கொரோனா தொற்று பரவலால் பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினார். தனது நண்பனான கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து 2021ம் ஆண்டு ஸெப்டோ என்ற பாஸ்ட்டான மளிகை பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லை நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் பிக்பாஸ்கெட், டன்ஸோ மற்றும் அமேசான் போன்ற தொழில்துறை ஜாம்பவான்களுக்கே கடும் போட்டியாக அமையும் அளவிற்கு மின்னல் வேகத்தில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்தது.
2024ம் ஆண்டு கணிப்பின் படி இ-காமர்ஸ் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள், அதாவது 1,600 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. இதைவிட ஷாக்கிங்கான செய்தி என்னவென்றால், 23 வயதே ஆகும் ஆதித் பாலிச்சாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 43 ஆயிரம் கோடி என்பது தான்.
ஆதித் பாலிச்சா எடுத்த எடுப்பிலேயே ஸெப்டோவை வெற்றிகரமானதாக மாற்றவில்லை. சிறுவயது முதலே கைவல்யா வோஹ்ரா, ஆதித் இருவரும் நண்பர்கள். இவர்கள் ஆன்லைனில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்யும் கிரானாகார்ட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மும்பையில் தொடங்கினர். இந்நிறுவனம் 10 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதற்கு முன்னதாக GoPool உடன் இணைந்து ஸ்டார்டப் நிறுவனத்தை தொடங்கினார். அதுவும் தோல்வி அடைந்தது. இப்படி அடுத்தடுத்த தோல்விகளுக்குப் பிறகும் துவண்டுவிடாமல் ஆதித் மேற்கொண்ட விடாமுயற்சி தான் இன்று ஸெப்டோ வடிவில் விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளது.