உலகம்

ஆட்டோ ஓட்டுநர் டு ரோல்ஸ்-ராய்ஸ் கார் ஓனர் – யார் இந்த சத்யா சங்கர்?

உழைப்பு மட்டும் தான் மனிதனை உயர்த்தும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான சத்யா சங்கர். ஆட்டோ டிரைவராக வாழ்க்கையை ஆரம்பித்த அவர், இன்று இன்று ரோல்ஸ்-ராய்ஸ் காரை வாங்கும் அளவிற்கு மல்டி மில்லியனராக வளர்ந்துள்ளார்.கர்நாடகா அரசின் கடன் உதவியுடன் ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்ட ஆரம்பித்த சத்யா சங்கர், இரவு பகல் பாராமல் உழைக்க ஆரம்பித்தார். அதற்கு கைமேல் பலனாக ஆட்டோ அம்பாசிட்டர் காராக மாறியது. சில வருடங்களிலேயே தான் உழைத்து சேர்த்த பணத்தில் சொந்தமாக டயர் டீலர்ஷிப் ஷோரூமை ஆரம்பித்தார். ஆட்டோமொபைல் துறையை விட அவர் அடுத்ததாக ஆரம்பித்த கூல்ட்ரிங்ஸ் பிசினஸால் சங்கரின் வாழ்க்கையே அடியொடு மாறியது.

Bindu Jeera Masala Soda என்ற நிறுவனத்தை தொடங்கினார். கோடை காலத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடிய Fizz Jeera Masala கூல்டிரிங்க்ஸ் சுவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிசினஸ் பிக்அப் ஆனதோடு, கோடிகளில் லாபமும் கொட்ட ஆரம்பித்தது. தற்போது புத்தம் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் அல்ட்ரா-லக்சரி மாடலான பாண்டோம் மாடலை வாங்கியுள்ளார். கோல்டன் நிறத்தில் சத்யா சங்கர் வாங்கியிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 9 கோடியே 50 லட்சம் ரூபாயாகும்.தற்போது ரோல்ஸ்-ராய்ஸ் பாண்டோம் காரை மனைவி உடன் சத்யா சங்கர் டெலிவிரி பெறும் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button