பாலஸ்தீனியர்களுக்காக தியாகம் – படிப்பை உதறிவிட்டு வந்த இந்திய மாணவி!

பாலஸ்தீனியர்களுக்காக அமெரிக்க முனைவர் படிப்பை கைவிட்டு விட்டு, வெளியேறிய இந்திய மாணவியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காசா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெண்கள், குழந்தைகள் 70 சதவீதம் பேர். இஸ்ரேலின் இந்த அராஜகத்தை கண்டித்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட, பல பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் டொனால்டு டிரம்பின் வெள்ளை வெறி அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், இந்திய மாணவியான ரஞ்சனி ஸ்ரீ நிவாசன் என்பவரின் விசாவை ரத்து செய்தது, டிரம்ப் நிர்வாகம். அவர் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் அதற்கான ஆதாரங்களை வெளியிடவோ, நிரூபிக்கவோ, இல்லை. வழக்கமாக இதுபோன்று மாணவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி, விசாவை ரத்து செய்யும் போது, அதனை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். அப்படி மேல்முறையீடு செய்யும் சில மாணவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நீதிமன்றங்கள் அனுமதிகளை வழங்கியுள்ளன.அதே நேரம் டிரம்ப் நிர்வாகத்திடம் கெஞ்சாமல், அமெரிக்காவில் இருந்து தானாவே வெளியேறியுள்ளார் ரஞ்சனி ஸ்ரீ நிவாசன். இவர் குஜராத்தின் அகமதாபாத் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் வென்று, அமெரிக்காவின் பல நிறுவனங்களில், பல பட்டப்படிப்புகளை படித்து வந்தவர்.அவர் இந்தியாவுக்கு வந்து, பிறகு அங்கிருந்து கனடாவுக்கு சென்று விடுவார் எனக் கூறப்படுகிறது. அவரை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என இஸ்ரேல் ஆதரவு பாஜகவினர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.