விளையாட்டு

ராகுல் டிராவிட் நிலை – ரசிகர்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கர்நாடக கிரிக்கெட் அணியின் அரையிறுதி ஆட்டத்தின் போது, காலில் பலத்த காயம் அடைந்தார்.இந்த நிலையில், ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் அவர் உள்ள நிலையில், வீரர்களின் பயிற்சியை பார்வையிட வந்த போது, ஊன்று கோல் உடன் காட்சி அளித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. கோல்ஃப் வண்டியில், பிறரின் உதவிடன் மைதானத்தை அடைந்தார்.முன்னதாக கர்நாடக கிரிக்கெட் அசோசியேசன் நடத்திய போட்டியில், விஜயா அணி சார்பாக, அரையிறுதியில் தனது 16 வயது மகன் அன்வாய் உடன் பங்கேற்றார். 18வது ஓவரின் போது, ரன் எடுக்க ஓடிய போது, காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டு, நிலைகுலைந்து, வலியால் துடித்தார். பிறகு சக வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.இந்தச் சூழலில் தான், காயம் இன்னும் முழுவதுமாக குணமடையாத நிலையிலும், வீரர்களின் பயிற்சியை மேற்பார்வையிடுவதற்காக மைதானத்திற்கு வந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button