அரசியல்

“ஆர்.எஸ்.எஸ் பற்றி விமர்சிக்க கூடாது என காங்.தலைமை தனக்கு உத்தரவிட்டு இருந்தது” திக் விஜய் சிங்!

குஜராத்தில் அண்மையில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்காந்தி, காங்கிரசில் உள்ள பாஜக ஆதரவாளர்களை களையெடுத்து, கட்சியை வளர்க்க வேண்டும் என வெளிப்படையாக பேசினார். இந்தக் குற்றச்சாட்டு பொதுவெளியில் பரவலாக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியினர் மறுத்து வந்தனர். ஆனால் இதனை ராகுல்காந்தியே ஒப்புக்கொண்டது பேசு பொருளாக மாறியது.இந்தக் சூழலில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான திக் விஜய் சிங், ராகுல்காந்தியின் இந்த செயல்பாடுகளை பாராட்டுவதாக தெரிவித்துள்ளார்.

Was asked not to talk speak against RSS in Gujarat, says Digvijaya | Politics News - Business Standard

மேலும் 1993 முதல் 2003 வரை தான் மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த காலத்தில், குஜராத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களுக்கு சென்ற போது, ஆர்எஸ்எஸ் பற்றி விமர்சித்து பேசக்கூடாது, அப்படி பேசினால் இந்துக்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என காங்கிரஸ் தலைமை எச்சரித்ததாக குறிப்பிட்டுள்ளார்.உண்மையில் இந்துக்களுக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்து மதத்தை சுரண்டித் தின்பது தான் ஆர்எஸ்எஸ். மக்களை சுரண்டி, அதிகாரத்தை கைப்பற்றி, அதனை அனுபவிப்பது தான் அவர்களது கொள்கை. இந்து மதத்தை ஆயிரம் ஆண்டுகளாக காத்து வரும் சங்கராச்சாரியர்கள் யாரும், பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை ஆதரிப்பது இல்லை என்றும் திக் விஜய் சிங் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button