இது தான் உண்மையான சாதனை – வெற்றிக்கு எதுவும் தடையில்லை!

15 ஆண்டு கால காதலரை கரம் பிடிக்கும் நடிகை அபிநயா…காது கேளாத, வாய் பேச முடியாத நிலையிலும், 58 படங்களில் நடித்து சாதனை செய்தவர்…நாடோடிகள் நடிகைக்கு குவியும் வாழ்த்துக்கள்…சமுத்திரகனியின் நாடோடிகள் திரைப்படம் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. அந்தப் படத்தின் பெரு வெற்றி, அபிநயாவின் திரைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. எனினும் உண்மையில் அபிநயா வாய் பேசமுடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார்.அப்படி இருந்தும் நாடோடிகள் படத்தில் அவரது நடிப்பு பேசியது. சினிமா வசனங்களை எழுதி, மனப்பாடம் செய்து, காட்சிகளுக்கு ஏற்ப, உதட்டு அசைவை மட்டும் கொடுப்பார். பிறகு டப்பிங்கில் பின்னணி குரல் மூலம் காட்சிகள் கோர்க்கப்படும்.
டப்பிங் ஆர்ட்டிஸ்டுகளுக்கு எந்த பெரிய சிரமமும் இல்லாத வாறு, அவரது உதட்டு அசைவுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது.இதன் காரணமாக அடுத்தடுத்து சுமார் 58 படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.
சினிமாத்துறையில் வென்ற அவர் தனிப்பட்ட வாழ்க்கையிலும், வெற்றிக் கொடியை நாட்டியுள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்த ஒரு புகைப்படம் வைரானது. தனது 15 ஆண்டு கால நண்பரை கரம் பிடித்துள்ளதாகவும், நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.தான் பேசாமலேயே, தனது கண் அசைவை பார்த்து, என்ன சொல்ல வருகிறேன் என்பதை தனது கணவர் புரிந்து கொள்வார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார் அபிநயா.