தமிழ்நாடு

பாய்ந்த குண்டர் சட்டம்! எய்ட்ஸ் நோய் பாதிப்பு! சீரழியும் இளைஞர்கள்! யார் இந்த திவ்யா கள்ளச்சி!?

திவ்யா கள்ளச்சி,,,, கண்டா கார்த்திக் போன்ற பெயர்களில் இளைஞர்கள், சிறுவர்களை வழிகெடுக்கும் விதத்தில் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.முன்னதாக சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் ஜாமீனில் வெளி வர முடியாதவாறு, தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.இந்த பெண் திவ்யா கள்ளச்சிக்கு எய்ட்ஸ் நோய் உள்ளதாகவும், அது அவரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் பாதிக்கும் என கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தற்போது அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்காமல், பல்லாயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளை பெற்றோர் சேர்த்து விடுகின்றனர்.

இதற்கு காரணம் குழந்தைகள், ஆங்கில புலமை பெற வேண்டும் என்பது தான்.ஆனால் குழந்தைகளிடம் தற்போது, குடி கொண்டுள்ள இந்த மொபைல் போன் பழக்கம் அவர்களது பெற்றோரின் கனவுகளை கேள்விக்குறியாக்குகிறது.
அதிலும் குறிப்பாக ஆபாச யூ டியூப்பர்களின் அநாகரீக பேச்சுக்களை குழந்தைகள் கவனித்து, பேசத்தொடங்குகின்றனர். எனவே இதனை காவல்துறையினர் கண்காணித்து, கேளிக்கை, வீடியோ கேம் போன்ற பெயர்களில் யூ டியூப் சேனல் நடத்தி, குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும் பேர்வழிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button