உலகம்

கல்வி அவதாரம் எடுத்த உருளைக்கிழங்கு? குவிந்த பக்தர்கள்!

உத்தரபிரதேசத்தின் சம்பலில் ஏற்கனவே மத ரீதியாக பதற்றம் நிலவும் சூழலில் தற்போது, புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள துளசி மானஸ் கோயிலுக்கு ஒரு வித்தியாசமான நிகழ்வு பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளது. உருளைக்கிழங்கில் தோன்றும் கடவுள் சிலை போன்ற உருவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.வான்ஷ் கோபால் தீர்த்தத்திற்கு அருகிலுள்ள கேமா கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவர் தனது நிலத்தில் வித்தியாசமான ஒரு உருளைக்கிழங்கை கண்டுபிடித்தார். அசாதாரண வடிவத்தில் இருக்கும் அந்த உருளைக்கிங்கின் புகைப்படத்தை கிராமத்தில் உள்ள கோயில் பூசாரிக்கு அனுப்பி இருக்கிறார்.

சங்கர் லாலு என்ற அந்த பூசாரி அந்த உருளைக்கிழங்கை கோயிலுக்கு கொண்டு வருமாறு சொல்லி இருக்கிறார். மேலும் அந்த உருளைக்கிழங்கு பல அவதாரங்களில் வடிவமாக இருப்பதாகவும் கல்கி அவதாரத்தின் வருகையை குறிக்கும் ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.விவசாயியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருளைக்கிழங்கு, கோயிலின் ராம் தர்பாரில் வைக்கப்பட்டுள்ளது.இந்த கண்டுபிடிப்பு ஹோலி கொண்டாட்டங்களுக்கு ஆன்மீக உற்சாகத்தை சேர்த்திருக்கிறது.

இந்த நிகழ்வு கடந்த ஆண்டு நவம்பரில் கலவரங்களால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதியில் வகுப்புவாத உணர்வை அதிகரித்துள்ளது.ஏற்கனவே ஹோலி பண்டிகை ரமழானின் இரண்டாவது வெள்ளிக்கிழமையுடன் ஒன்று சேர்ந்து வருவதால் சாம்பல் பகுதி முழுவதும் சாதாரண சூழ்நிலை நிலவுகிறது அசம்பவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button