உலகம்

பிரிட்டன் பணக்காரர்களால் கூட வாங்க முடியாத அரண்மனை – வாங்கி முகேஸ் அம்பானி!

லண்டன் புறநகரில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான என்ற Stoke Park பண்ணை வீட்டை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது. இதன் விலை 529 கோடி ரூபாய்.அந்தப் பகுதியான தொல்குடிகள் வாழ்ந்த பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறமிக்க பகுதி என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த Stoke Park பண்ணை வீடானது பிரிட்டனின் முதல் கோல்ஃப் கிளப் ஆகும். 1908 ஆம் ஆண்டு இது நிறுவப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அதாவது 1581ஆம் ஆண்டு பிரிட்டன் மகாராணி முதல் குயின் எலிசபெத் அந்த மாளிகையில் வசித்து வந்துள்ளார். அதற்கு பிறகு கடன் காரணமாக அந்த மாளிகையை Huntingdonஇன் 3வது பிரபு Henry Hastings க்கு விற்பனை செய்துள்ளார்.

தற்போது இந்த பண்ணை வீட்டில் 49 அறைகள் கொண்ட 5 நட்சத்திர விடுதி, மார்பிள் குளியலறைகள், 3 சொகுசு உணவு விடுதிகள், 4000 சதுர அடி கொண்ட உடற்பயிற்சிக் கூடம், இண்டோர் நீச்சல் குளம், 13 டென்னிஸ் மைதானங்கள், 27 குழிகள் கொண்ட கோல்ஃப் மைதானம் என சுமார் 300 ஏக்கருக்கு பறந்து விரிந்து காணப்படுகிறது.
அங்குள்ள டென்னிஸ் மைதானங்களில் நோவக் ஜோகேவிச், ஆண்டி முர்ரே உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வீரர்கள் விளையாடியுள்ளனர்.ஜேம்ஸ் பாண்டின் பல திரைப்படங்கள் இங்கு வைத்து சூட்டிங் செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட பிரிட்டன் பணக்காரர்களின் கனவு பங்களாவைத் தான் முகேஷ் அம்பானி விலைக்கு வாங்கியுள்ளார்.இந்தச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், எல்லாம் அவன் செயல் என நெட்டிசன்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button