அரசியல்

14 இடங்களில் சோதனை

சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா எனப்படும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை கண்டித்து, அக்கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் உள்ள எஸ்டிபிஐ மாநில தலைமை அலுவலகங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. மேலும் ஆந்திர மாநிலம் நந்தியால், ஜார்கண்ட் மாநிலம் பக்கூர், உ.பி மாநிலம் லக்னோ, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உள்ளிட்ட 14 நகரங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சியின் தலைமை அலுவலங்களில் இந்த சோதனையை அமலாக்கத்துறை நடத்தியுள்ளது.

Saffron's invincibility is withering to the relief of majority of citizens,” SDPI expresses satisfaction over BJP's defeat in by-polls – TwoCircles.net

சென்னை மண்ணடி இப்ராஹிம் ஷாகிப் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறையினர், அலுவலகத்தை உட்புறமாக பூட்டிக்கொண்டு, உள்ளே சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அலுவலகத்திற்கு வெளியே கூடிய எஸ்டிபிஐ தலைவர்கள், தொண்டர்கள், இது ஒரு கோழைத்தனமான, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொழுகை நேரம் வந்த போது, அலுவலகத்திற்கு வெளியே கூடி தொழுகையில் ஈடுபட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button