விளையாட்டு

ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 3 லட்சம்! அப்படி என்ன உள்ளது இந்த கிரிக்கெட்டில்?

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதிப் போட்டிக்கான ஒரு டிக்கெட் விலை 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது.
மார்ச் 9 ஆம் தேதி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம். ஆனால் டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கிய உடனேயே சுமார் 1 லட்சம் பேர், அந்த இணைய தளத்திற்குள் நுழைந்துள்ளனர். சுமார் 2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.ஒரு டிக்கெட்டின் ஆரம்ப விலை 250 திர்கம்.

Champions Trophy Final: Over a lakh rush online, tickets sold out in two hours

 

இந்திய மதிப்பில் சுமார் 6000 ரூபாய். பிரிமீயம் டிக்கெட்டுகள் 1000 திர்கம். இந்திய மதிப்பில் சுமார் 24 ஆயிரம் ரூபாய். அதிக பட்ச டிக்கெட்டின் விலை 12,000 திர்கம் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சம் ரூபாய். 12 கேட்டகிரியில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
இதே போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றிருந்தால் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணம் பெறும் வெறும் 310 ரூபாய் மட்டுமே ஆகும். அதிகபட்ச கட்டணமே சுமார் 7 ஆயிரம் ரூபாய் தான். இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்த நிலையில், இந்திய அணி ஆடும் ஆட்டங்களும் துபாயிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியா மட்டுமின்றி, பாகிஸ்தான் ரசிகர்களும் அதிக தொகை கொடுத்து, போட்டிகளை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button