பெரிய அரசியல் தலைவர்களுக்கு கூட இவ்வளவு கூட்டம் கூடியது இல்லை!?

உ.பி. கும்பளமேளாவில் ஊசி, பாசி விற்று, தனது கண் அழகால் பிரபலம் அடைந்த ம.பி. சிறுமி மோனாலிஷா தற்போது, வட இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டிலும் பிரபலம் அடைந்துள்ளார்.வெளிநாடு என்றால், சுவிர்லாந்து, நியூசிலாந்து அல்ல. விசா கூட இல்லாமல் நாம் சென்று வரும் நேபாளம் தான். வட இந்தியாவைப் போலவே நேபாளத்திலும் படிப்பறிவு குறைவு. இந்தச் சூழலில் தான் சிறுமி மோனாலிஷாவை காண அங்கு லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர்.
மவுலாப்பூர் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்நாட்டி அமைச்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறுமி மோனாலிஷாவும் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரை காண லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூறியுள்ளனர்.அங்கு இந்தி பாடலுக்கு நடனமாடும்படி கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து, அந்த மேடையில் அவர் நடனம் ஆடிய போது, கூட்டம் ஆர்ப்பரித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த மோனாலிஷா, இது தனது முதல் வெளிநாட்டு பயணம் என்றும், இதற்கு முன்பு இப்படி ஒரு கூட்டத்தை தான் பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.அதே போல் இந்திய நெட்டிசன்கள் பலரும், இவ்வளவு கூட்டம் நேபாளத்தில் கூடியது இதுவே முதல் முறை என்றும், இந்திய தலைவர்கள் மற்றும் நேபாள அரசியல் தலைவர்களுக்கு கூட இவ்வளவு கூட்டம் கூடுவது இல்லை என கூறியுள்ளனர்.