அரசியல்

“அதானியின் கல்லாவை நிரப்புவது தான் மோடியின் வேலை” ராகுல்காந்தி கடும் தாக்கு!

அதானி விவகாரம் பற்றி டிரம்பிடம் விவாதித்தீர்களா என அமெரிக்காவில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த மோடி, இரண்டு பெரிய தலைவர்கள் சந்திக்கும் போது, இது போன்ற தனிப்பட்ட விவகாரங்கள் பற்றி பேசுவதில்லை என பதில் அளித்தார்.இதனை கடுமையாக விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி, இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த நாட்டில் உங்களிடம் கேள்வி கேட்கப்பட்டால், பதில் சொல்ல மாட்டீர்கள். அமைதியாக இருப்பீர்கள். ஆனால் வெளிநாட்டில் கேட்டால், இது தனிப்பட்ட விவகாரம் என்பீர்கள். அமெரிக்காவில் கூட அதானியின் ஊழலை மறைத்துள்ளார் மோடி,.

அவரை பொருத்தவரை, நாட்டின் வளர்ச்சி என்பது, அம்பானியின் கல்லாவை நிரப்புவது தான். பிறகு அம்பானியிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு, நாட்டை கொள்ளையடிப்பது தான் மோடியின் வேலை. நாட்டின் சொத்துக்கள் கொள்ளை போவது பற்றி கேட்டால், அது தனிப்பட்ட விவகாரம் என்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
அமெரிக்கர்களிடம் முதலீடு பெற்று அந்த பணத்தில், இந்தியாவில் உள்ள மின்வாரிய நிறுவனங்களுக்கு லஞ்சம் வழங்கி, ஒப்பந்தம் பெற்றதாக அதானி நிறுவனத்தின் மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டி இருந்தது. இதனை அதானி நிறுவனம் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button