மோடியின் பரிசு! மயங்கிய அதிபர் மனைவி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது பிரான்ஸ் பயணத்தின் போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு சத்தீஸ்கர் பாரம்பரிய இசைக்கலைஞர்களை சித்தரிக்கும் டோக்ரா கலைப் படைப்பை பரிசாக வழங்கியுள்ளார்.பித்தளை மற்றும் தாமிரத்தால் செய்யப்பட்ட இந்த கலைப்படைப்பு, பண்டைய இழந்த மெழுகு வார்ப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும், நிலப் படிக்கல் மற்றும் பவளத்தியும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியான பிரிஜிட் மேக்ரானுக்கு, பிரதமர் மோடி ராஜஸ்தானில் இருந்து வெள்ளியால் பொறிக்கப்பட்ட மேஜை கண்ணாடியை வழங்கினார்.
அதில் மலர் மற்றும் மயில் உருவங்கள் இடம்பெற்றுள்ளன, இது அழகு மற்றும் கருணையை குறிக்கும் கலைப்படைப்பு என கூறப்படுகிறது.மேலும் இது உலோகங்களால் மெருகூட்டப்பட்டு திறமையான கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இதானால் இந்த கண்ணாடி ராஜஸ்தானின் வளமான பாரம்பரியத்தை தெளிவாக காட்டுவதாக கூறப்படுகிறது.பிரதமர் மோடி இந்த பயணத்தில் AI தொழில்நுட்பம் குறித்தும், வர்த்தகம், ஆற்றல் மற்றும் கலாச்சார இணைப்புகள் குறித்தும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.