இந்தியா

ரயில் கண்ணாடியை உடைத்த கும்பமேளா பக்தர்கள்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் கும்பமேளாவிற்கு செல்ல ரயிலில் இடம் கிடைக்காததால், ஏ.சி. அறையின் கண்ணாடியை சக பக்தர்களே அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பீகார் மாநிலம் மதுபானியில் சுதந்திர சேனானி எக்ஸ்பிரஸ் ரயில் மீது இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து தெரிவித்த பயணி ஒருவர், பெண்கள் குழந்தைகள் இருந்த ஏ.சி. பெட்டியின் கண்ணாடியை கற்களை வைத்து உடைத்தனர். இதனால் குழந்தைகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் 1 மணி நேரம் ரயில் அங்கேயே நின்று கொண்டிருக்கிறது. உடனே அங்கிருந்து ரயிலை எடுக்கவில்லை.

பிறகு, உடைந்த கண்ணாடிகளை கூட சரிசெய்யாமல் ரயிலை எடுத்தனர். கண்ணாடி உடைக்கப்பட்டதில் பலர் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எங்களது பெட்டி மட்டுமின்றி, பாண்ட்ரி கார் மற்றும் ரிசர்வ் பெட்டிகள் மீது கற்களை கொண்டு தாக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

கும்பமேளா குறித்து பெரிய அளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டு, லட்சக்கணக்கான மக்களை வர வைத்ததில் தான் குறியாக இருந்தார்களே தவிர, அவர்களுக்கு தேவையான உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என மற்றொரு பயணி குற்றம்சாட்டியுள்ளார்.


============

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button