இந்தியா

2 பேர் மட்டுமே வசிக்க ரூ. 818 கோடி ரூபாய்க்கு பிரமாண்ட மாளிகை! வைர அறைகள்!

முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவர் 2018 ஆம் ஆண்டு ஆனந்த் பிரமல் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்தார். இவர்களது திருமணம் அம்பானியின் ஆடம்பர மாளிகையான ஆண்ட்டிலியாவில் நடைபெற்றது.முகேஷ் அம்பானி தனது மகளுக்கு விலை உயர்ந்த பல பரிசுப் பொருட்களை வழங்கினார். ஆனால் சம்பந்திக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க மணமகன் ஆனந்த் பிரமலுக்கு அவரது பெற்றோர் அளித்த ஒரு விலை உயர்ந்த பரிசு தான் குளிட்டா மாளிகை.அரபிக் கடலை பார்த்தவாறு, கம்பீரமாக நிற்கும் இந்த குளிட்டா மாளிகை சுமார் 50,000 சதுர அடி கொண்டது. பணக்காரர்களுக்கெல்லாம் பணக்காரர்கள் வசிக்கும் மும்பையின் ஒர்லி பகுதியில் தான் இந்த மாளிகை அமைந்துள்ளது.

இந்த 5 அடுக்கு மாளிகையின் முகப்பு பக்கத்தில் லண்டனின் Eckersley O’Callaghan நிறுவனம் a diamond motif ஐ வடிமைத்துள்ளது.வீட்டுக்குள் பல சொகுசு ஆடம்பர அம்சங்கள் உள்ளன. வைர அறைகள், பரந்து விரிந்த புள்வெளிகள், கோவில், பிரமாண்ட டைனிங் ஹால், அவுட் டோர் பூல், பாதாள பார்க்கிங், உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இந்த பிரமாண்ட மாளிகையை இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்திடம் இருந்து, 2012ஆம் ஆண்டு, பிரமல் குடும்பத்தினர் 500 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர். இதன் தற்போதைய மதிப்பு 818 கோடி ரூபாய்.தற்போது இந்த வீட்டில் இஷா அம்பானி, அவரது கணவர் ஆனந்த் பிரமல், ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டு கிருஷ்ணா, ஆதித்யா என்ற இரட்டை குழந்தைகள் பிறந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button