உலகம்

தபேலா கலைஞர் ஜாகிர் உசேனின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?

தபலா மேஸ்ட்ரோ உஸ்தாத் ஜாகிர் ஹுசைன் தனது 73வது வயதில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற முக்கிய விருதுகளைப் பெற்ற இசை மேதையின் மரணம் ஒட்டுமொத்த இசை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜாகிர் உசேன் 9 மார்ச் 1951 அன்று மும்பையில் பிரபல தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவிற்கு பிறந்தார். மும்பையிலேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். தனது தந்தையிடம் சிறு வயதிலேயே தபேலா வாசிக்கக் கற்றுக்கொண்ட ஜாகிர் உசைன், அவ்வப்போது அவருடன் கச்சேரிகளில் பங்கேற்பதும் வழக்கமானது.அப்படி அவர் முதன் முதலில் பங்கேற்ற இசைக்கச்சேரிக்கு அவருக்கு 5 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த 5 ரூபாய் ஆரம்பம் தான், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மற்றும் 5 கிராமி விருதுகளை வெல்ல ஊக்கமாக அமைந்தது. அதுமட்டுமின்றி கோடிகளில் சொத்துக்களை குவிக்கவும் காரணமாக அமைந்தது.

ஜாகிர் உசேனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8.48 கோடி என கூறப்படுகிறது.அவர் ஒரு கச்சேரிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வசூலித்துள்ளார்.ஜாகீர் உசேன் 1988 ஆம் ஆண்டு தனது 37வது வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றார்.· 2002 ஆம் ஆண்டில், அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.· 2023 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.· 1990 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவர் 5 கிராமி விருதுகளையும் பெற்றுள்ளார்.· இவர் சுமார் 12 படங்களில் நடித்துள்ளார். ‘ஹீட் அண்ட் டஸ்ட்’ என்ற பிரிட்டிஷ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். 2024ம் ஆண்டு இவர் கடைசியாக நடித்த மங்கி மேன் திரைப்படம் வெளியானது. இவரது மனைவி கதக் நடனக் கலைஞரும் ஆசிரியையுமான அன்டோனியா மின்னெகோலா, இவருக்கு அனிசா மற்றும் இசபெல்லா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button