கடுப்பான நீர்யானை சுற்றுலா பயணிகளை கதற விட்ட வீடியோ!

காட்டில் வாழும் விலங்குகள் அது உண்டு, அதன் வேலை உண்டு என அமைதியாக தான் இருக்கும், ஆனால் அதற்கு மனிதர்களை பார்த்தால் மட்டும் சில நேரங்களில் என்ன தோன்றுமோ தெரியாது, சைலண்ட் மோடில் இருந்து வைப்பிரேஷன் மோடுக்கு மாறி விரட்ட ஆரம்பித்து விடுகிறது. இது சின்னச்சிறு குரங்குகளில் ஆரம்பித்து பெரிய சைஸ் நீர்யானை வரை பொருந்தும். சபாரி வந்த சுற்றுலா வாசிகளை நீர்யானை ஒன்று கடுங்கோவத்துடன் விரட்டியடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தென்னாப்பிரிக்காவில் உள்ள காடு ஒன்றில் எடுக்கப்பட்ட வீடியோவில், முதலில் ஒரு நீர்யானை அமைதியாக நடந்து வருகிறது. அப்போது சஃபாரி ஜீப்பில் இருந்த சுற்றுலா பயணி ஒருவர் ஓவர் எக்ஸைட்மெண்டாகி, நீர்யானையை தனது கேமராவில் படமெடுக்க ஆரம்பிக்கிறார்.
திடீரென கேமராவை பார்த்ததால் நீர்யானை காண்டாகிவிட்டதோ என்னவோ தெரியவில்லை, படமெடுத்துக் கொண்டிருக்கும் நபரைப் பார்த்து பாய்ந்து ஓடுகிறது.உடனே உஷாரான டிரைவர் ஜீப்பை வேகமாக எடுத்து, ரீவர்ஸிலேயே ஓட்டுகிறார். ஆனால் நீர்யானையோ, கேமராவைத்திருக்கும் நபரை “சின்ன சேதாரமாவது செய்யாமல் விடமாட்டேன்” என்பது போல் வாயைத் திறந்து கொண்டு ஆக்ரோஷத்துடன் துரத்துகிறது. ஜீப் வேகமாக பின்வாங்கிய பிறகே நீர்யானை அமைதியாகிறது.தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பலரும் அய்யய்யோ… நீர்யானைக்கு இவ்வளவு கோவம் வருமா? என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.