இந்தியா

ரூ. 11 கோடி பரிசு – வரி மட்டும் ரூ.4 கோடி! உண்மையை வெளிப்படுத்திய குகேஷ்!

உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் குகேஷ் வென்று 11.34 கோடி ரூபாய் பரிசுத் தொகை பெற்றுள்ளார். இது மட்டுமின்றி தமிழ்நாடு அரசு அவருக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது. இந்நிலையில், குகேஷ் பெற்ற 11.34 கோடி ரூபாயில், கணிசமான தொகையை அவர் வரியாக செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர் சுமார் 4.7 கோடி ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது.எனினும் குகேஷ் தற்போது, வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு மொத்தமாக 21 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 42 சதவீதத்தை அவர் வரியாக செலுத்த வேண்டியது வரும் என்றும் சில ஆடிட்டர்கள் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.அதிகாரப்பூர்வமாக பார்க்கப் போனால், வருமான வரித்துறை சட்டத்தின்படி, ஒருவரது ஆண்டு வருமானம் 15 லட்சத்திற்கு மேல் சென்றாலே, கூடுதல் தொகையில் இருந்து 30 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படும். உதாரணமாக ஒருவரது ஆண்டு வருமானம் 20 லட்சமாக இருந்தால், அதாவது, 15 லட்சத்தில் இருந்து கூடுதலாக 5 லட்சம் வருவதால், அந்த 5 லட்சத்திற்கு 30 சதவீதம் அதாவது, 1.5 லட்சம் வரி விதிக்கப்படும். அதாவது, அந்த நபர் 18.5 லட்சத்தை மட்டுமே வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

எனவே குகேஷ் தனது பரிசுத் தொகையில் இருந்து சுமார் 42 சதவீதத்தை இழக்க வேண்டியது வரும் என சிலர் கூறுகின்றனர்.அதே நேரம் மத்திய அரசு விதி விலக்கு கொடுக்குமேயானால், வரிகள் இன்றி, அவர் முழு பணத்தையும் எடுத்துக் கொள்ள முடியும்.இதுகுறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன. குகேஷ் வென்ற பணத்தை, பறிப்பதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் காத்திருப்பது போன்று சித்தரித்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில், தான் பணத்திற்காக விளையாடவில்லை என குகேஷ் கூறியுள்ளார். தனது கனவை நிறைவேற்ற, தனது தாயும், தந்தையும் பல தியாகங்களை செய்துள்ளதாகவும், இதனால் தங்களுக்கு பண கஷ்டம் ஏற்பட்டது உண்மை தான் என்றும் அதே நேரம், தாங்கள் போதிய அளவு பணம் வைத்திருந்த பணக்காரர்களாகவே இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்போது, பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button