இந்தியா

குஜராத்தில் மருத்துவர்கள் செய்த மாபெரும் மோசடி – இருவர் பலி!

குஜராத்தில் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்யா யோஜனா (PM-JAY) போன்ற அரசாங்க சுகாதாரத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி ஆரோக்கியமான நபர்களுக்கு தேவையற்ற ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அகமதாபாத்தில் உள்ள கியாதி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பிரதான் மந்திரி-ஜன் ஆரோக்யா யோஜனா போன்ற அரசின் இன்சூரன்ஸ் திட்டங்களை தவறாகப் பயன்படுத்தி பணம் திரட்டி வந்துள்ளனர். அதாவது சின்ன,சின்ன பிரச்சனைக்காக இந்த மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட ஆரோக்கியமான நபர்களுக்கு இதயத்தில் கோளாறு இருப்பதாக சொல்லி, ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் போன்ற அறுவை சிகிச்சைகளை செய்துள்ளனர். இதற்காக பிரதமரின் இன்சூரன்ஸ் திட்டங்கள் மூலம் பணம் பெற்றுள்ளனர்.

இந்த தவறான சிகிச்சையால் அடுத்தடுத்து 2 நோயாளிகள் பலியானதை அடுத்து, கியாதி மருத்துவமனையின் கோர முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவரை 19 நோயாளிகளுக்கு இதுபோல் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் வந்ததையடுத்து, குஜராத் அரசு மருத்துவமனையின் மருத்துவர் மற்றும் இயக்குனர் மற்றும் மூன்று பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டாக்டர் பிரசாந்த் வஜிராணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button