டொனால்ட் டிரம்பால் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பான செய்தி!

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்கும் நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது. ஏனெனில் இந்திய மக்களைப் பொறுத்தவரை தங்கம் ஆடம்பர பொருளாக மட்டுமல்ல அத்தியாவசியத்திற்கு பயன்படுத்தக்கூடிய சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் தான் ஒவ்வொரு கிராமாக நகை சேர்க்கும் பழக்கம் இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களிடமும் காணப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் முழுவதும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் புதிய உச்சங்களைத் தொட்டு வந்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது தங்கம் விலை சவரனுக்கு 59,520 ரூபாயாகவும், கிராம் 7,440 ரூபாயாகவும் இருந்தது. இதேநிலை நீடித்தால் எங்கே தங்கத்தின் விலை சவரனுக்கு 60 ஆயிரம் என்ற உச்சத்தை தொட்டு விடுமோ என இல்லத்தரசிகளும், நடுத்தர மக்களும் கடும் பீதியில் இருந்தனர்.
குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற முதல் நாளில் இருந்தே தங்கத்தின் விலை சரிய ஆரம்பித்தது. தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரிப்பு, அமெரிக்க டாலர் குறியீடு, அமெரிக்க பங்குச் சந்தைகளின் ஏற்றம், அதிகரிக்கும் பணவீக்கம் என பல காரணங்கள் இருந்தாலும், போர் மிக முக்கிய பங்கு வகித்தது. தான் அதிபரானால் போர் இல்லாத சூழலை உருவாக்க முயற்சிப்பேன் என டிரம்ப் வாக்குறுதி கொடுத்திருந்தார். இதன் காரணமாகவும், டாலர் மற்றும் கிரிப்டோகரன்சியின் வரலாறு காணாத உயர்வும் தங்கத்தின் விலை குறைய காரணமாக அமைந்தது.
கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 4160 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.