சினிமா

கோவாவில் சரக்கு வாங்கியது யாருக்கு… ரகசியத்தை உடைத்த அல்லு அர்ஜுன்!

நந்தமுரி பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கி வரும் “ஆஹா அன்ஸ்டாப்பபிள் சீசன் 4” ஆஹா ஓடிடி தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஷோவில் ஏற்கனவே மூன்று சீசன்கள் முடிந்துவிட்டன. முதல் பாகத்திற்கு விருந்தினராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், இரண்டாம் பாகத்திற்கு துல்கர் சல்மான் விருந்தினராகவும், மூன்றாவது எபிசோடில் ஹீரோ சூர்யாவும் கலந்து கொண்டனர்.

இந்த எபிசோடுகள் அனைத்தும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்றன. நான்காவது எபிசோடில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் விருந்தினராக வந்திருந்தார். அவருடன் அவரது தாயார் நிர்மலம்மாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அன்ஸ்டாப்பபிள் நிகழ்ச்சிக்கு வந்த அல்லு அர்ஜுன், தனது தனிப்பட்ட மற்றும் சினிமா வாழ்க்கை குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். தேசிய விருது, மெகா குடும்பத்துடனான உறவுகள் என பல விஷயங்களைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்த எபிசோடிற்கான ப்ரோமோக்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக அல்லு அர்ஜுன் கோவாவில் மது வாங்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது அனைவரும் அறிந்ததே. இப்போது அதே புகைப்படம் மீண்டும் ஒருமுறை அல்லு அர்ஜுனுக்கு அன்ஸ்டாப்பபிள் ஷோவில் காட்டப்பட்டுள்ளது.

பாலய்யா அல்லுவிடம் ‘நீங்க யாருக்கு மது வாங்கிட்டு வந்தீங்க?’ எனக் கேட்கிறார். அதற்கு அல்லு அர்ஜுன், “தான் ஸ்பெஷலாக கருதம் விசேஷ நபருக்காக மது பாட்டில்களை வாங்கிக்கொண்டு வந்தேன்” என்கிறார். ஆனால் அந்த ஸ்பெஷல் நபர் ப்ரோமோவில் காட்டப்படவில்லை. அந்த நபர் யார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், நவம்பர் 14 ஆம் தேதி மீண்டும் அன்ஸ்டாப்பபிள் எபிசோட் ஒளிபரப்பாகும் வரை காத்திருக்க வேண்டும்.

அப்போது அல்லு அர்ஜுன் சரக்கு வாங்கிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் நபர் நேரில் வந்து பேசப்போகிறார். 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்திற்கு இப்போது விடை கிடைக்கப்போவதால் சோசியல் மீடியாவில் இந்த செய்தி செம்ம வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button