சொந்தமாக சாட்டிலைட் வைத்திருக்கும் மலேசிய கோடீஸ்வரர் -யார் இவர்?

மலேசிய தொழிலதிபர்கள் வட்டாரத்தில் ஏகே என செல்லமாக அழைக்கப்படுவர் தான் டான் ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய தொழிலதிபரான இவரது 5.2 பில்லியன், அதாவது இந்திய மதிப்பில் 438.79 கோடி ரூபாய். இதனால் மலேசியாவிலேயே 4வது மிகப்பெரிய பணக்காரராக உள்ளார். இதை எல்லாம் விட சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், இவர் தனக்காக தனியாக சாட்டிலைட் வைத்துள்ளார் என்பது தான்.
ஆம், ஏகே தொலைத்தொடர்பு மற்றும் மல்டிமீடியா துறைகளில் கொடிக்கட்டி பறக்கக்கூடியவர். இவர் மலேசியாவில் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ், ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் மற்றும் MEASAT பிராட்காஸ்ட் நெட்வொர்க் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களை தொடங்கிய தன் மூலமாக மிகப்பெரிய தொலைதொடர்பு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்துள்ளார். இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான ‘ஏர்செல்’ நிறுவனத்தில் ஆனந்த கிருஷ்ணன் 7 பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 700 கோடி முதலீடு செய்தார்.
ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பட்டதாரியான ஆனந்த கிருஷ்ணனிடம் மொத்தம் 3 பிரைவேட் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளன, அவை தற்போதும் பூமியின் சுற்றுப்பாதையைச் சுற்றி வருகின்றன என்பது சுவாரஸ்யமானது. ஒரு திறமையான தொழிலதிபர் என்பதைத் தவிர, டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், மதம் மற்றும் தொண்டு பணிகளுக்காகப் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.