CIA தலைவராகப்போகும் அமெரிக்க வாழ் இந்தியர்… யார் இந்த காஷ்யப் காஷ் படேல்?

இரண்டாவது முறையா டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள இந்த சமயத்துல, அடுத்தடுத்து அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே புத்திசாலி இளைஞரான விவேக் ராமசாமி தன்னோட நிர்வாகத்துல இடம் பிடிப்பாருன்னு டிரம்பே ஓபனாக அறிவித்திருந்தார். மேலும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஆந்திராவின் மருமகனான ஜேடி வான்ஸ் பதவியேற்கப் போறதா அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்தால் தன்னோட சொந்த நாட்டு மக்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பாரு. வேற நாட்டுக்காரங்கள முன்னேற விடமாட்டாரு, குறிப்பாக அரசு பதவிகளை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. இந்த கணிப்புகளை எல்லாம் தவிடு பொடியாக்குற மாதிரி அடுத்தடுத்து இந்திய வம்சாவளியினருக்கு முக்கிய பொறுப்புகளை கொடுக்க திட்டமிட்டிருக்கிறதா கூறப்படுகிறது.
தற்போது மற்றொரு இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவிலேயே மிகவும் உயரிய மற்றும் முக்கியமான பொறுப்பான சிஐஏ தலைவர் பதவி கிடைக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குஜராத்தை பூர்வீகமாக கொண்ட காஷ்யப் ‘காஷ்’ படே ல் தான். இவர் கடந்த டிரம்ப் ஆட்சி காலத்தின் போது பாதுகாப்பு மற்றும் உளத்துறை பிரிவுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியிருக்காரு. இவர் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த டிரம்ப் ஆட்சியில் அவர் வெற்றி பெற ரஷ்யா தான் காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தொடர்பான விசாரணையில் டிரம்பிற்கு காஷ்யப் ஆதரவாக இருந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியில் உளவு ரீதியாக பல்வேறு விவகாரங்களில் காஷ்யப் டிரம்பிற்கு உதவியுள்ளார். இதன் காரணமா காஷ்யப்பை சிஐஏ தலைவராக நியமிக்க டிரம்ப் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.