சினிமாதமிழ்நாடு

துப்பாக்கி விவகாரம் – சுமூகமாக தீர்த்து வைத்த ஜெயலலிதா!

துப்பாக்கி பட பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைத்த ஜெயலலிதா…
அமரன் விவகாரத்தில் தீர்க்கப்படாத கவலைகள்…

விஸ்வரூபம் படத்திற்கு முன்பு, துப்பாக்கி படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போதும் முதலமைச்சர் ஜெயலலிதா, முஸ்லீம் சமூக தலைவர்கள் ஒப்புதல் உடன் தான் படம் வெளியாக வேண்டும் என விரும்பினார். இதனால் படக்குழுவினர் முஸ்லீம் சமுதாய பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டு காண்பித்தனர்.

அப்போது, முஸ்லீம் தலைவர்களிடம் பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நான் சாதாரண குடும்பத்தில் இருந்து, கஷ்டப்பட்டு வந்தவன். இது எனது வாழ்க்கை என மன்றாடினார். அந்த படத்தின் உதவி இயக்குநராக இருந்தவர் தான் தற்போதைய அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

சில சர்ச்சைக்குரிய காட்சிகள் சுட்டிக்காட்டப்பட்டன. இப்படியாக அந்த திரைப்படம் ஒரு வழியாக வெளியானது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி, தற்போது, அதைவிட கஷ்மீரிகளை மோசமாக சித்தரித்து, அமரன் படத்தில் காட்சிகளை வைத்துள்ளார்.

இந்தியாவிற்காக உயிர் தியாகம் செய்த, போற்றுதலுக்குரிய அதிகாரி முகுந்த் வரதராஜனின் அர்ப்பணிப்பை, தங்களது அரசியல் மற்றும் பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்தியுள்ளது, படக்குழு…
==========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button