
விஸ்வரூபம் பிரச்னையில், நாட்டை விட்டே ஓடிப்போவேன் என அலறிய கமல்ஹாசன்…
சத்தம் இல்லாமல், அமரன் மூலம் பழி தீர்த்துக் கொண்டாரா?
ஆளுமையை நிரூபித்து, கமலை அடக்கிய ஜெயலலிதா…
விஸ்வரூபம் திரைப்படம் 2013ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளால் கடும் எதிர்ப்பு எழுந்தது. முஸ்லீம் சமுதாய தலைவர்கள் களத்தில் குதித்தனர். அப்போது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனை எதிர்த்த கமல்ஹாசன், தான் நாட்டை விட்டே ஓடி விடுவேன், அல்லது வேறு மாநிலத்திற்கு செல்வேன் என்றெல்லாம் கதறினார். அவருக்கு அப்போதைய எதிர்கட்சித் தலைவர் கருணாநிதி ஆதரவு வழங்கினார். ராமதாஸ் ஆதரவு வழங்கினார். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாக கூறும் இடதுசாரிக் கட்சிகள், அமெரிக்க ஆதரவு திரைப்படத்திற்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கினர்.
இயக்குநர் பாரதி ராஜாவோ, இஸ்லாமியர்களை நேரடியாக மிரட்டும் வகையில், தீவிரவாதிகளைத் தான் படத்தில் கமல் காட்டியிருக்கிறார். இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என உங்களை நீங்களே காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என அறுவறுக்கத்தக்க கருத்தை தெரிவித்தார்.
ஆனாலும் ஜெயலலிதா உறுதியாக நின்று, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதற்கு பிறகே படம் வெளியானது. ஆனால் தற்போது, அமரன் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் முதல், காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வரை அந்த படத்திற்கு எந்த வித துளி ஆட்சேபம் கூட தெரிவிக்காமல், படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
============