உலகம்

3.50 லட்சம் பேருக்கு வேலை, 1.5 லட்சம் புதிய வீடுகள்! உலகின் முன்மாதிரி நகரத்தை உருவாக்கும் சவுதி!

கியூப் வடிவத்தில் சவுதி அரேபியா கட்ட உள்ள சர்ச்சைக்குரிய கட்டிடம்…
உலக வரலாற்றையே மாற்றத் திட்டம்….
மன்னர் குடும்பத்தின் கனவு உலகம் பற்றிய முக்கியத் தகவல்கள்…

தலைநகர் ரியாத் அருகே நியூ முராபா என்ற பெயரில் புதிய அதிநவீன நகர்ப்புறத்தை உருவாக்க சவுதி திட்டமிட்டுள்ளது. இந்த நகரத்திற்குள் 1 லட்சத்து 4000 வீடுகளும் 9000 ஹோட்டல்களும் வர இருக்கிறது. இதன் மூலம் 3,34,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று சவுதி அரேபியா கூறி இருக்கிறது.

மேலும் இந்த நவீன நகரத்தில் அழகான நடைபாதைகள், பிரம்மாண்ட மியூசியங்கள் உட்பட 80 வகையான பொழுதுபோக்கு இடங்களை உருவாக்க சவுதி திட்டமிட்டு இருக்கிறது.
இதை விட மிக முக்கிய விசயம் என்னவென்றால், இந்த நவீன நகரத்தின் நடு பகுதியில் முக்காப் என்ற பெரியல் பிரமாண்ட கட்டிடத்தை கட்ட சவுதி தீர்மானித்திருக்கிறது.

இந்த முக்காப் என்னும் கட்டிடமானது, கியூப் வடிவில் 4 புறங்களிலும், 100 அடுக்குமாடிகளை கொண்ட தொகுப்பு கட்டிடமாகும். இந்தக் கட்டிடத்தின் வெளிப்புறம் சவுதி அரேபியாவின் நூறாண்டுகள் பழமையான நஜாதி கலை வடிவத்தில் உருவாக்கப்பட இருக்கிறது.

இந்தக் கட்டிடத்தின் உயரம் சுமார் 1300 அடி, நீளம் 1200 அடியாகும். இந்தக் கட்டிடம் உருவாகும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய கட்டுமானமாக இதுவே இருக்கும்.
புர்ஜ் கலீபா உலகின் உயரமான கட்டிடம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஆனால் உலகின் மிகப்பெரிய கட்டிடம் என்ற சாதனையை இந்த முக்காப் படைக்க உள்ளது.

இந்த அளவுக்கு பிரம்மாண்டமான கட்டிடத்தை சவுதி ஏன் கட்ட தீர்மானிக்கிறது, இந்த கட்டிடத்திற்குள் அப்படி என்னதான் வர இருக்கிறது? என்று கேட்டால், இது ஒரு பிரம்மாண்ட திரையரங்கம் என்று சொல்லிவிடலாம். ஆனால் இது திரையரங்கு என்னும் வார்த்தையோடு நின்று விடுவதில்லை..
360 டிகிரியில் திரையிடப்படும், மூடப்பட்ட திரையரங்குக்குள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் உட்பட 24 மணி நேரமும் ஒரு திரைப்படத்திற்கு உள்ளேயே நாம் இருந்தால் எப்படி இருக்கும்? அதுதான் முக்காப்.

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கட்டிடத்திற்கு உள்ளேயே கற்பனைக்கு எட்டாத ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் நாம் ஒரு திரைப்படத்திற்கு உள்ளே இருப்பது போன்ற ஒரு உணர்வே இது தரும்..
இதற்குள் பார்வையாளராக நாம் சென்றுவிட்டால் உலகத்தை விட்டு வேறொரு கிரகத்துக்கு சென்றது போல் ஒர் உணர்வை நமக்கு இந்த கட்டிடம் தரும்.

ஒரு நொடியில் கடலுக்கு அடியில் இருப்பதைப் போன்ற ஒரு உணர்வையும் , மறு நொடியில் செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற ஒரு காட்சி உணர்வையும் இந்த கட்டிடம் நமக்குத் தரும்.
இந்த கியூப் வடிவ கட்டிடத்திற்கு நடுவே புஞ்சைகள் படர்ந்து இருப்பது போல சுழல் கோபுரம் ஒன்று அமைக்கப்பட இருக்கிறது.
இது அடித்தளத்திலிருந்து கட்டிடத்தின் மேல் கூரை வரை இந்த கோபுரம் இருக்கும்.

இந்த டோம் வடிவ கட்டிடத்தின் உட்புறத்தில் தான் திரைப்படம் திரையிடப்படும் அதற்குள்ளே இருக்கும் கோபுரத்தில் தான் பார்வையாளர்கள் இருப்பார்கள்.
இதனால் பார்வையாளர்கள் 360 டிகிரியில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களை, திரைப்படத்திற்கு உள்ளே இருந்தே காண்பார்கள்.

இந்த கட்டிடம் உருவானால் அமெரிக்காவிற்கு எப்படி சுதந்திரத் தேவி சிலை அடையாளமாக இருக்கிறதோ, இந்தியாவிற்கு எப்படி தாஜ்மஹால் அடையாளமாக இருக்கிறதோ, அதேபோன்று ரியாத்தின் அடையாளமாக முக்காப் மாறும் என்றும் இதன் வடிவமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இந்த கட்டிடத்தின் இந்த வடிவமைப்பு இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காபாவின் வடிவமைப்பை போல இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

உலகில் சதுர வடிவ கட்டிடம் காபா மட்டுமின்றி ஜெர்மனி தலைநகர் பெர்லினிலும் சதுர வடிவ கட்டிடம் இருக்கிறது என்றும், மேலும் உலகின் பல கட்டிடங்கள் இதே போல இருப்பதாகவும். இது கியூப் வடிவில் அமைந்திருப்பதாலேயே இது காபாவை போன்று ஆகிவிடாது என்றும் சவுதி ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மொத்த திட்டத்தின் மதிப்பு 5000 கோடி டாலராகம், இந்திய ரூபாயின் மதிப்பில் 4 லட்சம் கோடி ரூபாயாகும். இந்த கட்டிடம் 2030க்குள் நியூ முராபா நகரத்தோடு சேர்ந்து கட்டி முடிக்கப்படும் என்று சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் கூறியிருக்கிறார்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button