உலகம்

ஒரே நாளில் 16 தாக்குதல்

தெற்கு லெபனான் பகுதியில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படையினருக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தொடர்ச்சியான பல மோதல்கள் நடந்து வரும் சூழலில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 16 தாக்குதல்களை ஹிஸ்புல்லா தரப்பு நடத்தியுள்ளது.வடக்கு இஸ்ரேலின் பல்வேறு ராணுவ தளவாடங்களை குறி வைத்து பத்து வெவ்வேறு ராக்கேட் தாக்குதல்களை ஒருபுறம் நடத்திக் கொண்டே, மறுபுறம் லெபனானுக்குள் நுழைய முயலும் இஸ்ரேலின் தரைப் படையையும், அதன் டாங்கிகளையும் குறி வைத்து பல்வேறு தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியிருக்கிறது.குறிப்பாக வடக்கு இஸ்ரேலில் உள்ள கைஃபா நகரத்தில் கடுமையான ராக்கெட் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தி இருக்கிறது.

லெபனானை ஒட்டி உள்ள பல்வேறு இஸ்ரேலியா ராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லாவின் விமானப் படையும், ஏவுகணை பிரிவும் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா கூறி இருக்கிறது.ஹிஸ்புல்லாவின் இந்த தாக்குதல்கள் ஒவ்வொன்றும் அதன் தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நடைபெறுவதாக கூறியுள்ளது.இஸ்ரேல் லெபனானுக்குள் தரை வழியாக நுழைய முயற்சித்த நாளிலிருந்து தங்களுடைய ராணுவ வாகனங்களையும் டாங்கிகளையும் அதிகம் கவனம் பெறாத இடத்தில் மறைத்து வைத்தே இஸ்ரேல் நகர்கிறது, இருந்த போதிலும் மறைத்து வைக்கப்படும் டாங்கிகளை நோக்கி ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

பல நாட்களாக போராடியும் இஸ்ரேலின் தரைப்படையால் தெற்கு லெபனானில் உள்ள எந்த ஒரு மலைக்குன்றையும் கைப்பற்ற முடியவில்லை, மாறாக எல்லையில் உள்ள சில வீடுகளை மட்டுமே கைப்பற்றி ஊடகங்களுக்கு வெளியிட்டு வருவதாக ஹிஸ்புல்லா கூறியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button