365வது நாளில்…

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஓரு ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், 365வது நாளாக, ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து போர் செய்ததாக ஹமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவம் உள்ளிட்ட பல்வேறு போராளிக்குழுக்கள் தங்களது தாக்குதல்களை பட்டியலிட்டுள்ளன.அஸ்கலான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இஸ்ரேல் பகுதிகள் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியதாக அல்குத்ஸ் படை அறிவித்துள்ளது.வடக்கு காசாவின் ஜபாலியாவில் பாலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில், ஆக்கிரமிப்பு படையின் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.வடக்கு காசாவில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து தீவிர சண்டையில் ஈடுபட்டதாக அல் கஸ்ஸாம் ராணுவம் தெரிவித்துள்ளது.Beit Hanoun பகுதியில் ஆக்கிரமிப்பு வீரரை குறிவைத்து சுட்டதாக பாலஸ்தீனிய குழுக்கள் அறிவித்துள்ளன.
வடக்கு மற்றும் தெற்கு காசாவை பிரிக்கும் நெட்ரிசம் காரிடர் படைத் தளத்தை குறிவைத்து, மோர்ட்டார் ஷெல்ஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.ஹமாஸை ஒடுக்குகிறோம் எனக் கூறி, அப்பாவி பெண்கள், குழந்தைகளை கொலை செய்வதை வழக்கமாக வைத்துள்ள இஸ்ரேல், அக்டோபர் 7 ஆம் தேதியும் காசாவில் அதே கொடூரங்களை கட்டவிழ்த்து விட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள், கதறி அழும் காட்சிகள் உலகத்தை உலுக்குவதாக அமைந்துள்ளன.இதனிடையே கடந்த ஜுன் 15ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் காயம் அடைந்த, ஆக்கிரமிப்பு வீரர் ஒருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.