உலகம்

கதறி அழுகை!

தெற்கு லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடந்த பல்வேறு தாக்குதல்களில் 8 இஸ்ரேல் படையினர் உயிர் இழந்திருப்பதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. அதே நேரம் ஹிஸ்புல்லா அமைப்பு தங்களது தாக்குதலில் 80 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் மற்றும் காயம் அடைந்திருக்கலாம் என கூறியுள்ளது. மேலும் 5 இஸ்ரேல் டாங்கிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதில் இஸ்ரேலை உலுக்கிய விசயம் என்னவென்றால், ஹிஸ்புல்லா படை நடத்திய எதிர்பாரா தாக்குதலில் சிக்கிய ஆக்கிரமிப்பு வீரர்கள், உதவி கேட்டு, மரண கூக்குரல் இட்டுள்ளனர்.அவர்களது அழுகை, அலறல் அப்பகுதியையே உலுக்கியதாக ஹிஸ்புல்லா தரப்பு குறிப்பிட்டுள்ளது. அவர்களின் உதவிக்காக வந்த படைப்பிரிவு மீது, ஹிஸ்புல்லாவின் மற்றொரு படைப்பிரிவு திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

அவர்களை மீட்க, இஸ்ரேலின் 3வது படைப்பிரிவு வந்த போது, அவர்களை நோக்கியும் மற்றொரு ஹிஸ்புல்லா பிரிவு தாக்குதல் நடத்தியதால், ஆக்கிரமிப்பு வீரர்களை நீண்ட நேரம் காப்பற்ற முடியவில்லை என கூறப்படுகிறது.இதனையடுத்து, போர் விமானங்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் குண்டு வீசி, ஹிஸ்புல்லாவினரை பின்வாங்கச் செய்து, அவசர அவசரமாக உடல்களை இஸ்ரேல் விமானப் படை மீட்டுச் சென்றுள்ளது.

மற்றொரு சம்பவத்தில் இஸ்ரேலின் போர் விமானத்தை குறிவைத்து, ஹிஸ்புல்லா வான் இலக்குகளை தாக்கும் ராக்கெட்டை ஏவியதாக தெரிவித்துள்ளது. எனினும் இந்த ராக்கெட், இலக்கை தாக்கியதா எனத் தெரியவில்லை.
ஹிஸ்புல்லா புதன்கிழமை நடத்திய திட்டமிட்ட தாக்குதலுக்கு, “நஸ்ருல்லாவிற்கு செய்யும் சேவை” என பெயரிட்டிருந்தது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், புதன்கிழமை காலை தெற்கு லெபனானில் உள்ள ஒரு கிராமத்திற்கு நுழைந்தபோது, அங்குள்ள ஒரு கட்டிடத்திற்குள் ஹிஸ்புல்லா போராளிகளால் சுற்றி வளைக்கப்பட்டு, கடும் தாக்குதலை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது. துப்பாக்கிகள், சிறிய வகை ஏவுகணைகள் போன்ற பல்வேறு தாக்குதல்களை சந்தித்து ள்ளது இஸ்ரேல் படை.இஸ்ரேல் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா உடைய ஒரு ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட சில வெடிபொருட்களை இஸ்ரேல் ராணுவம் அழித்திருப்பதாக கூறியிருக்கிறது.

இதுவரை இஸ்ரேல் விமானப்படை 150 தாக்குதல்களை லெபனான் மீது நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.அதே நேரம் புதன்கிழமை முழுவதும் 5 டேங்கர்கள் அளிக்கப்பட்டு இருப்பதாக ஹிஸ்புல்லா கூறியிருக்கிறது. மேலும் ஒரே நாளில் 240 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா ஏவியுள்ளது. புதன்கிழமை, இரவு மட்டும் ஒரு மணி நேரத்தில் 100 ஏவுகணைகளை ஹிஸ்புல்லா ஏவியுள்ளது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதி பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button