விமான சேவைகள் நிறுத்தம்!

ஹிஸ்புல்லா மீதான பேஜர் தாக்குதல், ஹசன் நஸ்ருல்லா கொலை என அடுத்தடுத்து தங்களுக்கு வெற்றி கிடைத்து வருவதாக இஸ்ரேல் காட்டிக் கொண்ட நிலையில், மீண்டும் பலத்த அடியை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
இன்று ஒரே நாளில், மத்திய இஸ்ரேல் மற்றும் வடக்கு இஸ்ரேல் மீது, ஹிஸ்புல்லா, ஏமன் ஹவுத்திப் படைகள் பல்வேறு அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.தெற்கு லெபனான் மீது தரை வழித் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் திடீரென பின்வாங்கியுள்ளது. லெபனானுக்குள் இஸ்ரேல் நுழையவில்லை என ஹிஸ்புல்லா கூறியுள்ளது.
லெபனானுக்குள் இஸ்ரேல் நுழையும் திட்டத்தை அமெரிக்கா முன்கூட்டியே வெளியிட்டு விட்டதாக இஸ்ரேல் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் பற்றிய பின்னணிவெளியாகவில்லை.இந்நிலையில், பிரபல விமான சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து, இஸ்ரேலுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
Lufthansa விமான நிறுவனம் இஸ்ரேலுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்தியுள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளது.முன்னதாக Swiss International, Brussels Airlines, Austrian Airlines மற்றும் Eurowings, நிறுவனங்கள் நவம்பர் மாதம் வரை இஸ்ரேலுக்கு வழங்கி வந்த சேவைகளை நிறுத்துவதாக அறிவித்திருந்தன.