11வது முறையாக சம்பவம்!

அமெரிக்காவின் MQ9 REAPER ஆள் இல்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஏமன் ஹவுத்தி வான் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. வடக்கு சடா கவர்னகத்தின் மீது பறந்த போது, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தாங்கள் சுட்டு வீழ்த்திய 11வது விமானம் என ஏமன் படை தெரிவித்துள்ளது.MQ9 REAPER ஆள் இல்லா விமானத்தின் மதிப்பு 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் 252 கோடி ரூபாய். இதுவரை 11 விமானங்களை அமெரிக்க இழந்திருப்பதன் சுமார் 2800 கோடி ரூபாயை இழந்திருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 2 ஆள் இல்லா விமானங்களை அமெரிக்கா இழந்துள்ளது.
இந்த வகை ஆள் இல்லா விமானங்கள் 50 ஆயிரம் அடி உயரத்தில், தொடர்ந்து, 24 மணி நேரமும் பறந்து, உளவுத் தகவல்களை சேகரித்து அனுப்பவது, தாக்குதல் நடத்துவது போன்ற வேலைகளுக்கு பயன்படுகிறது.இதனிடையே அண்மையில் ஏமனின் ஹோதைதா துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து, அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் நடத்திய 17 வான் வழித் தாக்குதல்களில் 5 பேர் கொல்லப்பட்டதோடு, 57 பேர் காயம் அடைந்த நிகழ்வுக்கு, அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த நடவடிக்கை மூலம் படைகளின் திட்டங்கள், செயல்பாடுகளை முடக்கி விட முடியாது என சவால் விடுத்த அவர், இதற்காக பதிலடி விரைவில் கிடைக்கும் என எச்சரித்தார்.