கருப்பு தொழிலாளியின் தலைமையில் பின் நின்று தொழுத பெரு முதலாளிகள்!

கத்தார் நாட்டில் முன்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. கத்தார் ஹம்தான் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள சிறிய பள்ளிவாசல் ஒன்றில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்காக அப்பகுதியில் உள்ள எரிவாயு தொழிற்சாலை, ஊழியர்கள், அதிகாரிகள், பெரு முதலாளிகள் கூடியுள்ளனர்.அப்போது, தொழுகைக்கு தலைமை தாங்கும் இமாம், வர தாமதமாகியுள்ளது. இந்நிலையில், அங்கிருந்த உகாண்டாவைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் அப்துல் ரசீத் என்ற தொழிலாளி தனக்கு, குத்பா பிரசங்கம் தெரியும் எனக் கூறி, தொழுகைக்கு தலைமை ஏற்றுள்ளார்.
அவரது இனிய அரபு உச்சரிப்பு, மற்றும் அவரது உடை, இனம், நிறம், பிற வெள்ளை, அரபு முதலாளிகள், அவருக்கு பின் நின்று தொழுதவை போன்ற பல விசயங்கள், வைரலாக பரவின.இதனையடுத்து, அவரது இனிய அரபு உச்சரிப்பை பாராட்டி, கத்தாரில் உள்ள Ajyal educational centre அமைப்பு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது. அங்கு வந்த அப்துல் ரஹ்மானுக்கு இரு புறங்களிலும் நின்றிருந்த அரபு குழந்தைகள் மலர்களை தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் அவருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன.
அரபு நாடுகளில் உள்ள பள்ளிவாசல்களில், பொதுவாக அரபிகள் மட்டுமே தொழுகைக்கு தலைமை ஏற்று நடத்துவதில்லை. ஆசிய, ஆப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்களும் தலைமை இமாம்களாக இருந்து, தொழுகை நடத்துகின்றனர். அதே போல் தலைமை தாங்கி தொழுகை நடத்த முழு உடலை மறைத்த எந்த உடையும் அணியலாம் என்பதும், இந்த வீடியோவின் மூலம் தெரியவந்துள்ளது. அதே நேரம் மார்க்க அறிஞர்கள் கண்ணியத்திற்காக அங்கிகளை கூடுதலாக அணிகின்றனர்.
அரேபியா, பாரசீகம், துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாம் பரவத் தொடங்கிய காலக்கட்டத்திலேயே ஆப்ரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது. எனவே ஆப்ரிக்க கருப்பின இஸ்லாமியர்கள், இஸ்லாத்தின் மூத்த குடிகளில் ஒன்றாக உள்ளனர். கடும் வறுமையிலும் இஸ்லாத்தை கடைபிடிக்கின்றனர்.அதே போல் வட இந்தியாவில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பே தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட பகுதிகளில் பரவ ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.