நடுக்கடலில் மீண்டும் சம்பவம்!

அமெரிக்காவின் 3 போர்க்கப்பல்களை குறிவைத்து தாக்குதல்…பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட 23 ஆயுதங்கள் மூலம் நடவடிக்கை…ஏமன் ஹவுத்திப் படைகள் அறிவிப்பு…வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க போர்க்கப்பல்களை குறிவைத்து, அதிரடித் தாக்குதல்களை ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்தியுள்ளதாக அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.
டெல் அவிவ் நகரை குறிவைத்து, பாலிஸ்டிக் மிசல்ஸ்களை ஏமன் படைகள் ஏவின. இதனை முறியடித்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. எனினும் மத்திய இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதால், சுமார் 20 லட்சம் ஆக்கிரமிப்பு பொதுமக்கள், பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.மேலும் பதுங்கு குழிகளுக்கு ஓடும் வழியில், கீழே விழுந்தவர்கள், மனநல பாதிப்பு அடைந்தவர்கள் என 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை, அமெரிக்காவின் 3 போர்க்கப்பல்களை குறிவைத்து, பாலிஸ்டிக் மிசல்ஸ்கள், க்ரூஸ் மிசல்ஸ்கள், ஆள் இல்லா விமானங்கள் என மொத்தம் 23 ஆயுதங்கள் மூலம் நடுக்கடலில் அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதில் தங்களது ஆயுதங்கள் கப்பல்களை தாக்கியுள்ளதாகவும் யஹ்யா சாரி குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேலுக்கு உதவுவதற்காக அந்த கப்பல்கள் செங்கடலில் சென்றதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக யஹ்யா சாரி தெரிவித்தார்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏமன் நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்தப் பேரணிகள் ஒரு வருடத்தை அடைய உள்ளன. இதனையொட்டி, வெள்ளிக்கிழமை ஏமன் பொதுமக்களிடம் அந்நாட்டின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி, நடப்பு சூழல்களை விளக்கினார்.