எந்த பாதிப்பும் இல்லை – வழக்கம் போல் தொடரும் நடவடிக்கைள்!

டெல் அவிவில் உள்ள மொசாத் தலைமையகம் மீது 500 கிலோ எடை கொண்ட, பாலிஸ்டிக் மிசல்ஸ்களை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் 2வது முறையாக மற்றொரு தாக்குதலை நடத்தியுள்ளது.இதனால் மத்திய இஸ்ரேல் முழுவதும் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் தங்களை பாதிக்கவில்லை என்பதை காட்டும் விதமாக வியாழக்கிழமை இஸ்ரேலின் 2 பிராந்தியங்களை குறிவைத்து, ஹிஸ்புல்லா 130 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.மத்திய தரைக்கடல் வழியாக லெபனானுக்குள் நுழைய முயன்ற இஸ்ரேலின் 2 ஆக்கிரமிப்பு பயங்கரவாத போர் விமானங்களை, வான் இலக்குகளை தாக்கும் ஆயுதங்கள் மூலம் எதிர்கொண்டபோது, அதில் இருந்து தப்பி… வந்த வழியே… ஆக்கிரமிப்பு விமானங்கள் பறந்து சென்று விட்டதாகவும்… ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமையும் ஆக்கிரமிப்பு ஹைஃபாவில் உள்ள ரபேல் ஆயுதச் தொழிற்சாலையை குறிவைத்து, ராக்கெட் தொகுப்புகளை வீசியதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.இதே போல் ஆக்கிரமிப்பு ஹைஃபாவில் உள்ள கிர்யட் மொக்சின் என்ற சிறுநகரை குறிவைத்து ராக்கெட் தொகுப்பு மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
கிர்யட் ஷ்மோனா மீது Falaq-2 ரக ராக்கெட்டுகளை வீசி ஹிஸ்புல்லா தாக்கியுள்ளது.Dado ராணுவத் தளம், 91வது Division ஆயுத கிடங்கு, Ahihud செட்டில்மென்ட் உள்ளிட்ட இலக்குகளை குறிவைத்து 50க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டுள்ளன.இதே போல் மேலும் 10க்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து, ஹிஸ்புல்லா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.லெபனான் மீது கடந்த சில நாட்களில் மட்டும் 1000த்திற்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல் குண்டு வீசியுள்ளது. இருப்பினும் தங்களது தாக்குதல் திறனில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஹிஸ்புல்லா தனது நடவடிக்கைகளை வழக்கம் போல் தொடர்ந்து வருகிறது.