முற்றிலும் நாசம்!

லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதலை தொடுத்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதிகள் பலர் வீர மரணம் அடைந்துள்ளதாக அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. அதே நேரம் ஹிஸ்புல்லாவின் ஒட்டுமொத்த மனித வளம், தலைமை, ஆயுதக் குவியலில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கடும் எதிர்த்தாக்குதல்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது. இதில் இஸ்ரேலும் கடும் சேதாரங்களை சந்தித்துள்ள நிலையில், அந்தத் தகவல்களை ரகசியமாக வைத்துள்ளது.
இந்தச் சூழலில், மறுபக்கம் ஈராக்கில் உள்ள இஸ்லாமிய ஆயுதப் படைகள், இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ஆள் இல்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதிலும் இஸ்ரேலுக்கு பலத்த சேதாரங்கள் ஏற்பட்டுள்ளன. சபெத் என்ற நகரில் ராணுவ தளம் முற்றிலுமாக நாசம் அடைந்துள்ளது. இதே போல் மேலும் சில பகுதிகளில் கடும் தீ தாக்குதல்கள் வெடித்துள்ளன. இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.